இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
354
லா. ச. ராமாமிருதம்
என்ன என்று எங்களுக்கு (அதாவது குழந்தைகளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. காஞ்சிபுரத்துக்கருகே ஐந்து மைல் தூரத்தில் ஐயன்பேட்டை என்ற கிராமத்தில் (தஞ்சாவூர் அய்யன்பேட்டையுடன் குழம்பிக் கொள்ள வேண்டாம்) அண்ணாவுக்கு ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் வாத்தியார் வேலை கிடைத்தது.
எங்கள் குடும்பம் - அண்ணா, அம்மா, சிவப்பிரகாசம், பானு, விரலான் - எங்கள் குடும்பம் மட்டில் கிராமத்துக்குப் பெயர்ந்தது.
இத்துடன் என் வாழ்க்கையின் முதல் ஸர்க்கம் முடிந்தது.