பக்கம்:பாற்கடல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

67


ஐயாவுக்கு blackmail பண்ணவேண்டும் என்கிற எண்ணம் அறவே கிடையாது. அப்படியென்றால் என்ன என்றே அறியார். ஆனால் தன் ரிஷிகோபத்தில், நாலுபேர் நடுவில் என்னத்தையாவது அவிழ்த்து விட்டால் அது நிஜமா, பொய்யா? ருசு பின்னால், மான நஷ்ட கேஸ் போட்டாலும் ஐயாவிடம் என்ன வசூலாகும் ? நடுத்திண்ணையில் என் கதி. என் கெளரவம் என்ன ஆறது? அவரோ நாக்கில் நரம் பில்லாத மனுஷன்.

மத்தியானம் பட்டைச்சாதம் நாலு - அளவு, தயிர், தாளிதம் எல்லாமே கணிசம். தவிர மாதச்சம்பளம், அது நேரே மன்னி கைக்கு வந்துவிடும் ஐயா சொன்னபடி

விசேஷ தினங்களில் உபயக்காரர்கள், வேண்டிக் கொண்டவர்கள் மண்டகப்படியில் பாயஸம், வடை, சுண்டல், சர்க்கரைப் பொங்கலில் அவர்களாகக் கொடுக்கும் பங்கு. தேங்காய்மூடி, சில்லரை, மடப்பள்ளி யிலிருந்து ஸன்னதிக்கு நைவேத்தியத்தைக் கொண்டு வந்து வைத்தால், படி உண்டு. ஐயாவின் பொடிமட்டை செலவுக்கு இடுப்பில் நிமிண்டிக்க இன்னும் என்ன வேண்டும்?

இந்தச் சம்பிரதாய செலவுகளுக்கு அபிஷேகக்காரன் பிசுகமாட்டான். பிசுகுவதால் சப்தரிஷி நாதரிடம் கஷ்டப்பட்டு சம்பாதித்த புண்ணியத்தில் குறைந்து போனால் பிறகு தான் இழைக்கும் அக்கிரமங்களுக்குப் பிராயச்சித்தம் எப்படி,

வெள்ளிக்கிழமை மாலை மட்டும் குறைந்தது நாலு சஹஸ்ரநாமம். அதற்கேற்றபடி அபிஷேகம். நைவேத் தியங்கள் நடக்கும். ஐயா கொடுத்ததை வாங்கிக்கொள்வார். சண்டை பிடிக்க மாட்டார். Don't Care.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/73&oldid=1532522" இலிருந்து மீள்விக்கப்பட்டது