பக்கம்:பாற்கடல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

87


நடுவரை ஒத்திப் போடப்படுகிறது. இல்லையேல் இன்று விடிகாலை தண்டனை நிறைவேறியிருக்க வேண்டும்.

காயத்ரியும் கண்ணனும் மயிலாப்பூர், சினிமாக் கலைஞர்களுக்கு ஏதோ பட்டமளிப்பு விழா.

தூக்கு தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமான குற்றம் நிகழ்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. பிறகு ஆசாமிகளைத் தேடிக் கைதுசெய்து பின்பு, விசாரணை, தீர்ப்பு, அப்பீல், பிறகு சட்ட நுணுக்க விவகாரம், மனு மறுப்பு. உயிரின் ஊசலாடல் இன்னும் ஓயவில்லை. அவர்கள் இருவரின் மனோநிலை எப்படியிருக்கும்?

இன்று TV யில், "பொல்லாதவன்.' சேகர், ஸ்ரீகாந்த் திரும்ப மணி பத்தாகும்.

பில்லாவுக்கு ஜனாதிபதியைப் பார்க்க வேண்டுமாம், அவன் கொலை செய்யவில்லையாம். அவரிடம் தான் உண்மையைத் தெரிவிக்கப் போகிறானாம், பார்க்க முடியாவிட்டால்? 'சும்மா இறந்துபோகிறேன். இது என்ன பிடிவாதம்? இதில் என்ன அர்த்தமிருக்கிறது? இதுவும் ஒரு பாணியா? உண்மை என்பது என்ன ? What is Truth? Pontius Pilate கிட்டதட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் கேட்டு விட்டுப் போன கேள்வி இன்னும் பதிலுக்கு அலைந்து கொண் டிருக்கிறது.

வீட்டைச் சுற்றித் தண்ணீரும் சகதியும். இன்று மழை நின்றாலும், தண்ணீர் வற்றினாலும், சேறு காய ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/93&oldid=1533366" இலிருந்து மீள்விக்கப்பட்டது