பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - பாற் கடல்

கிறது? எங்களுக்கு வீடு என்ருல் உங்களுக்கு உத்தியோகம். பார்க் கப் போளுல் யார்தான் விடுதலையா யிருக்கிருர்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையிலிருக்கிருேமே, இந்த உலகத்தில்? பனக் காரன் தங்கக் கூண்டில், ஏழை பரந்த கூண்டில், இந்த இரண்டு ஸ்தி தியிலு மில்லாமல் நம்மைப்போல் இருக்கிறவர்கள் இதிலுமில்லை, அதிலுமில்லை; காலே ஊன்றக்கூட ஆதாரமில்லாமல், அந்தரத்தில் தவித்துக்கொண்டிருக்கிருேம். இல்லாவிடில் இந்தச் சமயத்தில் நாம் பிரிந்து நீங்கள் எங்கேயோ இருப்பானேன்? நான் இங்கே இருப்பா னேன். ஏங்கி, உருகித் தவித்துக்கொண்டு? உத்தியோகத்தை உதறி விட்டு ஓடி வந்துவிட முடிகிறதா? எனக்கே தெரிகிறது, நான் ஒண் னும் அவ்வளவு அசடு இல்லை. மனஸ் வெச் சேன்னு எல்லாம் எனக்குத் தெரியும், இப்போ மனஸ் வெச்சிருக்கேன்!

ஆளுல், அதற்காக என்ளுேடு பேசக்கூடக் கூடாது என்று: இருந்ததா? போகிற சமயத்தில் என்னிடம் வந்து, "ஜகதா, நான் போயிட்டு வரட்டுமா?’ என்று என்னிடத்தில் ஒரு வார்த்தை சொல் லிக் கொண்டு போளுல், தலையைச் சீவிவிடுவார்களா? அதையும் தான் பார்த்துவிடுகிறது; என்ன ஆகிவிடும்? சாந்தியைத் தைக்குத் தள்ளிப் போட்டுவிட்டாலும் வாய் வார்த்தைகூடப் பேசிக்கக் கூடாது என்ருல், பிள்ளைகள் கலியானம் பண்ணிக்கொள்வா னேன்? இந்த வீடே வேடிக்கையாய்த்தானிருக்கிறது. நீங்கள் எல் லாம் இப்படி யிருக்கிறதகுல்தானே, நாங்கள் எல்லாம் வெட்கம் கெட்டவர்களாகி விடுகிருேம்?

ஆளுல் அம்மாவே சொல்லி யிருக்கிருள், கூட்டுக் குடித்தனம் என்ருல் அப்படித்தானிருக்கும் என்று. அவளும் சம்சாரி வீட்டில் தான் வாழ்க்கைப் பட்டாளாம். இடம் போதாத வீட்டில் நாலு ஜோடிகள் வாசம் பண் ண வேண்டுமானுல், என்ன பண்ணுகிறது? வீட்டுக்கு விருந்தாளி வந்தால் கேட்கவே வேண்டாம் திடீர்னு ஒரு ஜோடியில் ஒரு படுக்கை தாகுகவே திண்னேயில் வந்து விழுந்து விடுமாம். சீட்டைப் போட்டுக் குலுக்கிளுற்போல் யார் படுக்கை என்று போட்டபிறகுதான் தெரியுமாம். சொல்லவும் முடியாது,மெல்ல வும்முடியாது; திருடனுக்குத் தேள் கொட்டினுற்போல் வாயை மூடிக் கொண்டிருக்க வெண்டியதுதான். அம்மா சொல்றப்போ எனக்குச் சிரிப்பாய்வரும். இந்தச் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னல் அப்பா கூடச் சொன்ஞர்: "இதென்னடி, இந்த சம்பந்தம் அவ்வளவு உசி தமேன்? ஒரே சம்சாரி வீடாயிருக்கிறது. பையன் நாலு பேருக்கு நடு வில் நாலாமவனு. யிருக்கிருன், இன்னும் அவர்கள் வீட்டில் கலியா ணத்துக்கு ஒன்று இரண்டு பெண்கள் காத்திருக்கிருப் போலிருக் கிறது...' o:

"இருக்கட்டும், இருக்கட்டும். நிறையக் குடித்தனமாயிருந்து நிறையப் பெருகட்டும். நாளா வட்டத்தில் பார்க்கப் போனுல், இது தான் நம் பெண்ணுக்கு நல்லதா விளையும், பாருங்கோ. இப்பேச