பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற் கடல் 75

"ஆமா, என்னமோ சொல்றேள்; காரியத்தில் காணுேம். என்னேச் சுற்றி அஞ்சு பேர் இருக்கேள். முதுகைப் பிளக்கிறது; ஆளுக்கு அஞ்சு நாள்- ஏன் நானும் செய்யறேன். என் பெண் செய்யமாட்டாள்; அவள் வீதத்தை நான்தான் செஞ்சாகனும்ஆளுக்கு அஞ்சு நாள் காலேயிலெழுந்து காப்பி போடுங்களேன் என் கிறேன். கேட்டதுக்குப் பலன் எல்லோரும் இன்னும் அரை மணி நேரம் அதிகம் தூங்கறேள். -

எங்களுக்கு ரோஸ்மா யிருக்கும். இருந்து என்ன பண்ணுகிறது? அம்மாவை எதிர்த்து ஒன்றும் சொல்ல முடியாது. நாங்கள் 5; மணிக்கு எழுந்தால் அவர் ஐந்து மணிக்கு எழுந்து அடுப்பை மூட்டி யிருப்பார். ஐந்து மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு எழுந்து காப்பியைக் கலந்து கொண்டிருப்பார். நாலரை மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு. இந்தப் போட்டிக்கு யார் என்ன பண்ண முடியும்? - -

'வாங்கோ, வாங்கோ; காப்பியைக் குடிச்சிட்டுப் போயி டுங்கோ. ஆறி அவலாய்ப் போய் அதை மறுபடியும் சுடவைக்காத படிக்கு; அதுவே நீங்கள் பண்ற உபகாரம். நான் தான் சொல்

றேனே: நான் ஒண்டியாயிருந்த போது எல்லாத்தையும் நானே தானே செஞ்சாகனும்; நான் செஞ்சிண்டிருந்தேன். இப்பொ என்ன டான் னு கூட்டம் பெருத்துப் போச்சு; வேலையை ஏலம் போட்டா றது. ஊம், ஊம்...நடக்கட்டும்... நடக்கட்டும். எல்லாம் நடக்கற வரையில் தானே? நானும் ஒரு நாள் ஒஞ்சு நடு ரேழியில் கால் நீட்டிவிட்டேன்ன, அப்போ நீங்கள் செஞ்சுதானே ஆகனும்? நீங்கள் செஞ்சத்தை நான் எடுத்துண்டுதானே ஆகணும்? மடியோ விழுப்போ, ஆசாரமோ அநாசாரமோ-'

அம்மா அவர் காரியத்தைப்பற்றிச் சொல்லிக்கட்டும். எல்லாமே அவரே செஞ்சுண்டாத்தான் அவருக்குப் பாந்தமா யிருக்கிறது. எங்களைப் பெற்றவர்களும் ஏதோ தங்களுக்குத் தெரிஞ்சதை எங்க ளுக்குச் சொல்லித்தான் வைத்திருக் கிருர் கள். எங்களுக்குத் தெரிஞ்சதை, எங்களால் முடிஞ்சவரை நன்ருய்த்தான் செய்வோம். ஆளுல் அவர் ஆசாரத்தைப் பற்றிப் பெருமைப் பட்டுக் கொள்வதில் கடுகளவு நியாயம்கூட கிடையாது. ஜலம் குடிக்கும்போது ஒரு வேளேயாவது பல்லில் டம்ப்ளர் இடிக்காத நாள் கிடையாது; இதை யாராவது சொன்னுல்-இதற்கென்று கொஞ்சம் தைரியமாய் மூத்த ஓரகத்திதான் கேட்கமுடியும்-ஒப்புக்கொள்ள மாட்டார். 'எனக்குக் காது கேட்கல்லேயே’’ என்று விடுவார். இதென்ன, காதுக்குக் கேட்காவிட்டால், பல்லுக்குத் தெரியாதா என்ன?

உங்கள் தங்கை எங்கேயாவது திரிந்துவிட்டு, ரேழியில் செருப்பை உதறிவிட்டு, காலேக்கூட அலம்பாமல் நேரே சமையலறை யில் போய், "என்னம்மா பண் ணியிருக்கிருய்?' என்று வாளுயி லிருந்து ஒற்றை விரலால் வழித்துப் போட்டுக்கொண்டு வருவாள்.