பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 பாற் கடல்

காந்தி மன்னியின் வாழ்வே தீராத் துக்கமாகி விட்டது. சின்ன மன்னி அம்புறம் என்னிடம் விவரமாய்ச் சொன்குள் என்னுல் நிச மாவே கேட்கவே. முடியவில்லை. காதையும் பொத்திக் கொண்டு, கண்ணையும் இறுக மூடிக்கொண்டுவிட்டேன். அந்தக் காகூதியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் இரண்டாவது அண்ணு, தீபாவளிக்குச் சீனி வெடி வாங்கப் போய்ப் பட்டாசுக் கடையில் வெடி விபத்தில் மாட்டிக்கொண்டு விட்டாராமே! எந்த் மஹாபாவி சிகரெட்டை அணைக்காமல் தான் எறிந்தாளுே, அல்லது வேறு என்ன நேர்ந்ததோ? வெடித்த வெடியில் கடை சாமான்கள் பனே மர உயரம் எழும்பி விழுந்தனவாமே! அண்ணுவுக்குங் பிராண ன் அங்கேயே போய்விட்டதாம். அண்ணுவுக்கு முகமே இல்லேயர்ம். சில்லு சில்லாய்ப் பேந்து விட்டதாம். முகமிருந்த விடத்தில் துணி யைப் போட்டு மூடிக்கொண்டு வந்தார்களாம். .

சேகர் அப்போ வயிற்றிலே மூணு மாசமாம். இப்போ சேகருக்கு வயது ஏழா, எட்டா?

நிஜமா நான் கேக்கிறேன். இந்தக் கஷ்டத்தை நீங்கள் எல் லோரும் எப்படி ஸஹறித்துக் கொண்டிருந்தீர்கள்? அம்மாவும் அப் பாவும் எப்படி இதிலிருந்து மீண்டார்கள்? நீங்கள் எல்லோரும் முதலில் எப்படி உயிரோடிருக்கிறீர்கள்? காந்திமதி மன்னி கருகிப் போனதற்குக் கேட்பானேன்? இது நேருவதற்கு முன்குல், அவள் தான் ரொம்பவும் கலகலப்பாய், எப்பவும் சிரிச்ச முகமாய் இருப் பாளர்மே! ... or - -

இப்போக்கூட, அந்த முகத்தின் அழகு முற்றிலும் அழியவில்லை. அவள் சீற்றம் எல்லாம் அவள் மேலேயே சாய்கையில், நெருப்பில் பொன் உருகி நெளிவது போல, தன் வேதனையின் தூய்மையில்தான் ஜ்வலிக்கிருள் அவளுக்கு அவள் கதி நேர்ந்த பின், மற்றவர்கள் போல் தெறித்துக்கொண்டு பிறந்தகம் போகாமல், எங்களோடு ஒரு வராய், இதுவரை இங்கேயே அவள் தங்கி யிருப்பதிலும் ஒரு அழ்கு பொலிகின்றது. -

அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச் சற்றுக் குரல் தணிந்தது. .

ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கவில்லை? வா வா, எழுந் திரு-குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக்கையே. இது

நியாயமா? .

நியாயமாம் நியாயம் உலகத்தில் நியாயம் எங்கேயிருக்கு: காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று. -

அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?"