பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பால காண்டப் பிறர்க்கு ஒன்று உதவி, அவர் அடையும் மகிழ்ச்சியைக் கண்டு மகிழும் இன்பம் இன்பங்களுக்குள் சிறந்தது. அந்த இன்பத்தைத் தயரதன் மிதிலையிலும் பெற்றான். ஈண்டு, 'ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்' (228) என்னும் குறளின் முற்பகுதி கம்பரால் எடுத்தாளப்பட்டு இன்பம் பயக்கிறது. - இவ்வாறு, பல குறள் கருத்துகள் ஒட்டியுள்ள கம்பரின் மாங்கணிப் பாடல்கள் பாலகாண்டத்தில் LI 6U உள்ளன. மேன்மேலும் சுவைத்து மகிழலாம். அடுத்து, மற்றொரு மரம் காண்பாம்