பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பரின் சொல் மலர்-மாலைகள் தக்க இடத்தில் தக்க சொல்லைப் பெய்து பேசுவதும் எழுதுவதும் ஒரு விதக் கலையாகும். பேச்சினும், என்றும் நிலைத்திருக்கும் எழுத்து வடிவத்திற்கு இந்தக் கலை மிகவும் இன்றியமையாத தாகும். பேச்சு நடையும் எழுத்து நடையும் காலப் போக்கில் மாறுவதுண்டு. மாறுதலுக்கு மிகுந்த இடம்தரின், முற்கால நடை ஒரு மொழி போலவும், பிற்கால நடை மற்றொரு மொழி போலவும் தோன்றக்கூடும். அதனால், மாறுதலிலும் ஒரளவு கட்டுப்பாடு வேண்டும். எழுத்தால் ஆனது சொல்-சொல்லால் ஆனது சொற்றொடர் (வாக்கியம்) என்ற அடிப்படையில் ஆய்வது 'காரண காரிய முறை (Logic Method) ஆகும். முதலில் சொற்றொடர் -பின்பு சொல் -பின்னர் எழுத்து என்ற முறையில் ஆய்வது உளவியல் முறை (Psychological Method) offib. மாந்தர் முதலில் சொற்றொடராகத்தான் பேசினர். பின்பே சொற்றொடரிலிருந்து சொல் பிரிக்கப்பட்டது - அதற்குப் பின்பு சொல்லிலிருந்து எழுத்து பிரிக்கப்பட்டது. தனி எழுத்துக்கோ - தனிச் சொல்லுக்கோ பொருள் இல்லை. ஒரெழுத்து ஒரு மொழியாயினும் -தனிச் சொல்லாயினும் ஒரு சொற்றொடரில் வைத்துப் பயன் படுத்தும் பொழுதே அவற்றிற்கு மதிப்பும்பொருளும் உண்டு.