பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கம்பெனி-சென்னை' என்னும் நிறுவனத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள பதிப்பையே என் நூலுக்கு அடிப்படைஆதாரமாகக் கொண்டு எழுதியுள்ளேன். யான் இப்பதிப்பினைத் தேர்ந்தெடுத்தற்கு உரிய காரணம், தமிழ் யாப்பிலக்கணம் அறியாதாரும் எளிதில் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும்படிச் சொற்களைப் பிரித்து அமைத்துப் பதிப்பித்திருத்தலே யாகும். மற்றும் இம்மலிவுப் பதிப்பே, பலராலும் வாங்கப்பட்டிருக்கலாம்என் நூலோடு ஒத்திட்டு நோக்க உதவலாம். மலரை இதழ் இதழாகப் பிய்த்தும் கசக்கியும் நுகர்வது. பொருந்தாது என்பது அடியேனும் அறிந்த செய்தியே. இருப்பினும், எல்லாரும் படித்து இன்புறும்படி இப்படி யொரு பதிப்பும் இருக்கலாமே! யாப்பிலக்கண வல்லுநர்கள் சுவைக்கும்படியாக வேறு சில பதிப்புகள் உள்ளனவே.அவர்கட்கு அவை சாலும். பாடல்களின் சொற்களைப் பிரிக்காத வடிவத்தை முதலிலும், சொற்களைப் பிரித்துள்ள வடிவத்தை அதை அடுத்தும் அமைத்துள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பும் எனக்குப் பெருந்துணை புரிந்தது. நன்றி. நன்றி: அடியேனைத் தூண்டி நூல் எழுதச் செய்த திரு அ. அருணகிரி அவர்கட்கும் என் நூலைக் கற்று. ஆதரவு தருகின்ற சுவைஞர்கட்கும் மிகவும் நன்றி செலுத்துகிறேன். இந்நூலை அன்புடன் நன்முறையில் வெளியிட்ட வானதி பதிப்பகத்தார்க்கு என் மாபெரு நன்றி உரியது. வணக்கம். புதுச்சேரி-11 } பிப்ரவரி 1991 சுந்தர சண்முகன்