1s; பால போத இலக்கணம்.
(4) அடியில் வரும் வாக்கியங்களிலுள்ள மெய்யெழுத்துக்களை எடுத்துப் பிரிவுப்படி அட்டவணை அறையில் வரைந்து காட்டு. (1) தகப்பனர் புதுப்புத்தகம் வாக்கினர். (2) பொன்னன் பந்து விளையாடினன். (3) பஞ்சினல் ஆடை நெய்கிருர்கள். (4) திங்கட்கிழமை பள்ளிக்கூடம். (5) பூக்களில் வண்டுகள் மொய்க்கும். (6) கிளிக்குஞ்சு பச்சை நிறமாயிருக்கும். (?) பாழ்ங்கிணற்றில் பாம்புகள் வசிக்கும்.
|
8. உயிர்மெய் எழுத்து.
17.-உயிர்மெய் எழத்தென்றல் என்ன?
சொல் வல்லினம் மெல்லினம் இடையினம்
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கூடிப் பிறக்கும் எழுத்து உயிர்மெய் எழுத்தாம். 18.-உயிர்மெய் எழுத்துக்கள் எப்படிப் பிறக்கின்றன ; அவை
எத்தனை?
மெய்யெழுத்துக்கள் பதினெட்டில் ஒவ் வொரு மெய்யெழுத்தின்மேலும் பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் தனித்தனி எறுவதனல் உயிர்மெய்யெழுத்துக்கள் உண்டாகின்றன. பதி னெட்டு மெய்யோடும் பன்னிரண்டு உயிரையும்
பெருக்க இருநூற்றுப்பதினருகும். (18*12= 216)