இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அருமைக் குழந்தைகளே,
இன்று தமிழ் நாட்டில் உங்களுக்காக நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதி, உங்கள் மனத்தில் நிலையான ஒர் இடத்தைப் பெற்றிருப்பவர், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள். அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த கருத்துக்கள் இருக்கின்றன. எளிய நடையில், இனிய பாடல்கள் இயற்றுவதில் அவர் கைதேர்ந்தவர் என்பது யாவரும் அறிந்ததே.
அவர் எழுதிய முதல் பாட்டுப் புத்தகம் மலரும் உள்ளம். இரண்டாவதாக, அவருடைய பாட்டுக்களைத் தொகுத்து பாலர் பாடல் என்று வெளியிட்டோம். அதன்பின் அவருடைய பாட்டுக்கள் குழந்தைக்குரல், சிட்டுக்குருவி முதலிய புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.