பக்கம்:பாலும் பாவையும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்கள் நினைப்பதுபோல் பெண் குலத்தை மாசு படுத்துவதற்காக நான் இந்தக் கதையை எழுதவில்லை; தூய்மைப்படுத்துவதற்காகவே எழுதியிருக்கிறேன். இந்தக் கதையில் வரும் அகல்யாவிடம் எவ்வித வெறுப்பும் எனக்கு இல்லை. அவள் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்று குறிப்பிடும்போது மட்டும், எனக்கு அந்த இனத்தின்மேல் இயற்கையாக உள்ள வெறுப்பை ஓரளவு காட்டியிருக்கிறேன் - அவ்வளவுதான்! "காதலைப் பற்றி நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது!" என்று நீங்கள் சாதிக்கிறீர்கள். என்னால் இதை நம்ப முடியவில்லை. ஏனெனில், தமிழனும் தமிழச்சியும் தொன்றுதொட்டுக் காதலையும் போரையும் தவிர வேறு ஒரு பாவமும் செய்து அறியாதவர்கள்! #