21 'அம்மா..!" அவள் சட்டென்று அழுகையை நிறுத்தி, கண்களை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டு தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள்! உடனே கனகலிங்கத்தின் பார்வை அவள் கழுத்தின்மேல் விழுந்தது. அவன் எதிர்பார்த்தபடி அவளுடைய கழுத்தில் தாலி இல்லாமற் போகவில்லை; இருந்தது! 'அப்படியானால் கணவன் எங்கே?-வெளியே போயிருப்பானோ?-தான் இவளைத் துக்கம் விசாரிக்கப்போய், திடீரென்று அவன் வந்து சேர்ந்து, அதன் காரணமாக ஏதாவது விபரீதம் ஏற்பட்டால்...? கனகலிங்கம் திரும்பினான். "நில்லுங்கள்!-ஐயா, நில்லுங்கள்!” என்றாள் அந்தப் பெண். நின்றான். “உள்ளே வாருங்கள்!” என்றாள். உள்ளே சென்றான். "உட்காருங்கள்!” என்றாள். உட்கார்ந்தான்! இத்தனைக்கும் அந்தப் பெண் அப்போது மகுடி வாசித்துக் கொண்டிருக்கவில்லை; கனகலிங்கம் பாம்பாக உருமாறி அதற்குக் கட்டுப்பட்டிருக்கவில்லை. நடந்ததெல்லாம் இதுதான்; அவன் அவளை ஒரு முறை-ஆம், ஒரே ஒரு முறைபார்த்துவிட்டான்! அந்தப் பெண்ணும் அப்பொழுதுதான் பிறந்திருக்க வில்லை; அவள் பிறந்து குறைந்த பட்சம் இருபது வருடங்களாவது ஆகியிருக்கும். ஆயினும் அன்றலர்ந்த மலரைப்போல்-பின்பனிக் காலத்துப் புல் வெளியைப் போலநீண்ட நேர மழைக்குப் பிறகு 'கு பீரென்று வெளுத்த வானத்தைப் போல-அவள் அழகு விகசித்தது! ஆனால், அந்த அழகு ஏழ்மையின் இரங்கத் தக்க அழகு