பக்கம்:பாலும் பாவையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 இங்கு ல் சு பொஸ் த கம் எதுனா ச்சும் கீதாப்பா?” என்று வெளிச்சம் போட்டார். கனகலிங்கத்துக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவன் 'இல்லை என்று சொல்வதற்குப் பதிலாக, "ஓ எஸ்! வாட் யூ வாண்ட்?” என்று ஒரு போடு போட்டுவிட்டு, அவருடைய முகத்தை வைத்த விழிவாங்காமல் பார்த்தான். “என்னப்பா சொல்றே, நீ?” என்றார் அந்தப் பிரமுகர். “ஒன்றும் சொல்லவில்லை; போய் வாரும் ஐயா, போய் வாரும்!” என்றான் கனகலிங்கம். முகத்தில் அசடு வழியத் திடீர்ப் பிரமுகர்’ அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார். அவருடன் வந்திருந்த ஒரு காலி பாக்கெட் ஆசாமி, "என்ன தம்பி, உனக்கு விஷயம் தெரியாது போல இருக்குது! ஐயாவுடைய செலவிலேதான் இந்த விழா நடக்கிறதாக்கும்?” என்றான். “தெரியாமலென்ன?தெரிகிறது, தெரிகிறது!” என்றான் கனகலிங்கம். அ வ க ள் சென்றதும் யானைக் காதுகள் போன்ற கால'ரைத் தூக்கி விட்டுக்கொண்டு, கையில் புகையும் டேஞ்சர் லைட்டைப் பிடித்துக்கொண்டு, இந்தத் துரதிஷ்டம் பிடித்த நாட்டின் வருங்காலத் தலைவர்கள் என்று சொல்லப் படுபவர்களில் ஒருவர் வந்தார். அவர் கனகலிங்கத்தைக் கம்பீரமாக நோக்கி, “ஆண்-பெண் மர்மங்கள் இருக்கிறதா?” என்று பளிர் என்று கேட்டார். 'ஆண்-பெண் மர்மமா-!எனக்குத் தெரிந்தவரை ஆண் ஆண்தான்; பெண் பெண்தான். இதில் என்ன மர்மம் இருக்கிறது, சுவாமி?” என்றான் கனகலிங்கம். “சரி, மர்ம ம் இல் லாவிட் டால் தொலை யட்டும்; இரகசியங்கள்...?”