இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
45
46
72
நெஞ்சு இனிக்குமா?
"எந்தமிழர் அரசேற்றார்; எடுத்தவினை முடித்திட்டார்; இருளைச் சீய்த்தார்; செந்தமிழை முடிவைத்தார்; செய்தொழிலால் தமிழ் நிலத்தைச் சிறக்கச் செய்தார்; தந்தபயன் அளவில்லை; தம்புகழ்க்கும் வரையில்லை; தகவாம்” என்றே எந்தநொடிச் செவிமடுப்போம்; இளைத்தவுடல் பூரிப்போம்; இனிப்போம் நெஞ்சே!
- ?968
அரசியல் குழப்பம்!
மொழித்தெளிவும் பெறமாட்டீர்! செய்தித்தாள் சிறுநூல்கள் எல்லா வற்றும் , - - பழித்தவுரை வரைகின்றீர்! பண்பிழந்தே எழுதுகின்றீர்! பணத்தைச் சேர்த்தீர்!
வழித்தெளிவும் கொளமாட்டீர்! அரசியலை
வளர்ப்பதுவாய்க் குழப்பு கின்றீர்!.
விழித்தெழவும் விரும்புகிலிர் என்னபயன் விளைத்திடுவீர் தமிழ்நாட் டிற்கே!
- #966