பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

திருக்குறள்

தமிழ் மரபுரை


355. எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(இ-ரை.) எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் - காட்சியுங் கருத்து மாகிய எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும்: அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அந்தப் பொருளின் உண்மையான இயல்பை அல்லது கருத்தை அறிந்துகொள்வதே மெய்யறிவாகும்.

பொருள் என்பது பொருளும் பொருளைப்பற்றிய செய்தியும் என இருவகைப்படும். அவ் விருவகைப் பொருளின் மெய்த்தன்மையும் அறியும் முறை, முறையே, மெய்ப்பொருள் முறையும் உண்மைப் பொருட்பாட்டு முறையும் என இருதிறப்படும்.

மெய்ப்பொருள் முறையாவது, "சேலங் கல்லூரி முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டர்" என்றவழி, சேலம் என்னும் ஓர் ஊர்த் தொடர்பும், கல்லூரி என்னும் ஒரு தொழில்நிலையத் தொடர்பும், முதல்வர் என்னும் ஒரு பதவித்தொடர்பும் அனுமந்தராயர் என்பவரின் மகன் என்னும் ஓர் உறவு முறைத் தொடர்பும். இராமசாமி என்னும் ஓர் இயற்பெயரும், கவுண்டர் என்னுங் ஒரு குலப்பெயரும், ஓர் உயிர்மெய்ப்பொருட்கு ஒரு பிறப்பில் ஏற்பட்ட நிலையில்லாத நிலைமைகளும் சொற்களுமாதலின், அவற்றைக் கொள்ளாது, அவ் வுயிர்மெய்ப்பொருளை உயிரும் மெய்யுமாக இரண்டாகப்பகுத்து, அவ் விரண்டையும் வெவ்வேறு மெய்ப்பொருட் டொகுதியென வுணர்ந்து அவற்றின் மூலப்பொருள்வரை ஒன்றனுள் ஒன்றாக ஒடுக்கிக் கொண்டு சென்றால், இறுதியில் மூலமின்றி நிற்கும் பொருள்களை உணர்தலாம். 'எப்பொருள்' என்று பொதுப்படக் கூறியதால் அஃறிணைப் பொருள்களும் இவ்வாறே உணரப்படும் என அறிக.

இனி, உண்மைப் பொருட்பாட்டு முறையாவது,

"இம்மென்னு முன்னே எழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ'

என்றால், மிக விரைந்து பாடமுடியு மென்றும்;

சிவன் கொக்கிறகை அணிந்தான் என்றால், சிவவழிபாடு செய்வா னொருவன் கொக்கிறகுபோற் பூக்கும் பூவைச் சிவவுருவின் தலையிற் செருகினான் என்றும்;