பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

17


மிருந்து ஒப்புயர்வற்று மனமொழி கடந்த கடவுளை, உள்ளத்தில் எங்கும் என்றும் தொழுது. எல்லா வுயிர்களிடத்தும் அன்பும் அருளும் பூண் டொழுகுதலேயாம். திருவள்ளுவர் சமயமும் அதுவே.

இதனாலேயே அவர் எச் சமயத்தையுந் தழுவாது எல்லாச் சமயங்கட்கும் பொதுவாகக் கூறியதும். எல்லாச் சமயங்களும் கூறும் இறைவன் பெயர்களையும் கடவுட்குப் பொருத்தியதும் என்க.

வேறுநூல்: திருவள்ளுவர் வேறுநூல் செய்ததாகத் தெரியவில்லை. இவர் பெயரால் வழங்கும் ஒருசில இவர் பெயரைத் திருட்டுத்தனமாகக் கொண்டனவே.

5. திருவள்ளுவர் காலக் குமுகாய (சமுதாய) நிலை

திருவள்ளுவர் காலத்தில் ஆரியம் வேரூன்றிவிட்டது. நிறம்பற்றிய நால்வகை வரணப் பாகுபாடும் புகுத்தப்பட்டுவிட்டது. தமிழரெல்லாரும் பிராமணருக்குத் தாழ்ந்தவராயினர். பார்ப்பாரென்று சொல்லப்பட்ட இல்வாழ்க்கைப் பிராமணரும் தம்மை அந்தணரென்று கூறிக்கொண்டனர். தொழில்பற்றி யேற்பட்ட குலங்களும் பிறப்புப்பற்றிப் பெயர்பெறலாயின. புலவருள்ளும் பிராமணர் உயர்ந்தவர் என்னுங் கருத்தெழுந்தது, அறங்க ளெல்லாம் பொதுவாகப் பிராமணர்க்கே செய்யப்பட்டன. தமிழருக்குள் உறவுக்கலப்பும் ஒற்றுமையும் வரவரக் குறைந்துவந்தன. மூவேந்தரும் மன்னர் சிலரும் ஆரியச் சார்பாயிருந்ததினால் பிராமணியத்தைக் கண்டிக்க எவருக்கும் வாயில்லாமற் போயிற்று. அதனாற் புலவரும் அடிமையரா யினர். பிராமணர் தெய்வப் பிறப்பினர் என்னுங் கருத்து, தமிழருக்குள் வளர்ந்து வந்தது. அதனால் வடசொற்கள் தமிழில் தாராளமாகக் கலக்கவும் தமிழ்ச்சொற்கள் மறையவும் புதுத் தமிழ்ச்சொற்கள் தோன்றா' திருக்கவும், வழிவகுக்கப்பட்டுவிட்டது.

6. திருவள்ளுவர் காலச் சமய நிலை

ஆயிரமாண்டாக ஆரியம் தமிழகத்தில் இருந்துவந்ததினால், சமயத்துறை பெரும்பாலும் ஆரியவண்ணமாக மாறிவிட்டது. அரண்மனைகளிலும் கோயில்களிலும் செல்வர் மாளிகைகளிலும், வழிபாடும் சடங்குகளும் பிராமணராற் சமற்கிருதத்திலேயே நடத்தப்பட்டன. அரசர் ஆரியவேள்விகளை வேட்கத் தலைப்பட்டுவிட்டனர். துறவினால் மட்டும் வீடுபேறு கூடுமென்றும், அத்துறவு பிராமணனுக்கே யுரியதென்றும். ஆதன்கள் (ஆன்மாக்கள்) பல அஃறிணைப் பிறப்புப் பிறந்து அதன்பின் உயர்திணைப்