உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வத்தாற் கேடு வந்தவிடத்து அதை நீக்க முடியாமையின், அத் துன்பத்தைத் தானும் உடன் நுகர்ந்து வருந்துவதே; நட்பு - ஒருவனுக்கு நட்பாவது.

ஆறு என்னும் பொதுப்பெயர் நெறி, வழி என்பனபோல நல்லாற்றைக் குறித்தது. 'ஆறு-த்து' என்றதனால், 'அழிவினவை நீக்கி' என்பதில் 'அழிவினவை' தீயநெறிகளைக் குறித்தமை அறியப்படும்.

"இனி, நவையென்று பாடமோதி, அதற்குப் போரழிவினுஞ் செல்வ வழிவினும் வந்த துன்பங்களென்றும், 'அழிவின்க' ணென்பதற்கு யாக்கை யழிவின்கணென்றும் உரைப்பாருமுளர்' என்று பரிமேலழகர் கூறியுள்ளது நன்மறுப்பாகும்.

788. உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
யிடுக்கண் களைவதா நட்பு.

(இ-ரை.) உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை யவிழ்ந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று திருத்தி அம் மானக்கேட்டை நீக்குவதுபோல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பு ஆம் - நண்பனுக்குத் துன்பம் வந்தவிடத்து அப்பொழுதே சென்றுதவி அதை நீக்குவதே ஒருவனுக்கு உண்மையான நட்பாகும்.

‘ஆங்கே' என்பது உடுக்கை திருத்தற்கும் இடுக்கண் களைதற்கும் பொதுவாக இடையில் நின்றது. விரைந்து நீக்குவதென்பது இவ் வுவமையின் பொதுத்தன்மை. மானங் காத்தற்கண் ஒருவன் கை தன் மனத்தினும் முற்படுமென்னும் பரிமேலழகர் கூற்று, உளநூற்கு ஒத்ததன்று. 'உடுக்கை' தொழிலாகுபெயர்.

789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
யொல்லும்வா யூன்று நிலை.

(இ-ரை.) நட்பிற்கு வீற்று இருக்கை யாது எனின் - நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால்; கொட்பு இன்றி ஒல்லும்வா- ஊன்றும் நிலை - ஒருபோதும் வேறுபடாது இயன்ற வழியெல்லாம் தன் நண்பனுக்குதவி அவன் எவ்வகையிலுந் தளராதவாறு தாங்கும் உறுதியாம்.

அரியணையில் அரசிருக்கையாகிய வீற்றிருக்கை மக்கட்குள் சிறந்த நிலையைக் காட்டுதலால், நட்பின் சிறந்த நிலை இங்கு வீற்றிருக்கை யெனப்