791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
(இ-ரை.) நட்பு ஆள்பவர்க்கு நட்டபின் வீடு இல்லை - நட்பை நிலை யாகக் கைக்கொள்ள விரும்பியவர்க்கும் வேண்டியவர்க்கும், ஒருவரோடு நட்புச்செ-தபின் அவரைவிட்டு விலகுதல் இயலாது; நாடாது நட்டலின் கேடு இல்லை - ஆதலால், ஆராயாது நட்புச்செ-தல் போலக் கேடுதருவது வேறொன்றும் இல்லை.
சிலர் ஒருவரோடு நட்புக்கொண்டபின், அவரை விட்டுவிலக விரும்பாமல் அல்லது துணிவில்லாமல் இருக்கலாம். சிலர் தொழிற் கூட்டுப்பற்றி ஒருவரோடு நட்புக்கொண்டு, ஒருகாலும் விலக முடியாவாறு வாழ்நாள் ஒப்பந்தஞ் செ-திருக்கலாம்; அல்லது கயவரோடு தொடர்புகொண்டு அவர் பிடிக்குள் அகப்பட்டு விலக முடியாதவராயிருக்கலாம். இவ் விருசாராரையும் நோக்கியே ‘நட்ட பின் வீடில்லை' என்றார். இம்மைக்குரிய பொருளின்ப விழப்பு மட்டுமன்றி, மறுமைக்குரிய அறவிழப்பும் நேருமாதலால், நட்டலிற் கேடில்லை' என்றார். 'நாடுதல்' குணங்களையுஞ் செயல்களையும் நேரடியாகவும் பிறர் வாயிலாகவும் ஆரா-தல். 'கேடு' ஆகுபொருளி.
792. ஆ-ந்தா-ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்.
(இ-ரை.) ஆ-ந்து ஆ-ந்து கொள்ளாதான் கேண்மை - ஒருவனுடைய குணங்களையும் செயல்களையும் நல்லனவாவென்று பலமுறையும் பல வகையாலும் ஆரா-ந்து பாராது அவரொடு செ-துகொள்ளும் நட்பு; கடைமுறை - இறுதியில்; தான் சாம் துயரம் தரும் - நான் சாதற்கேதுவான துன்பத்தை யுண்டாக்கும்.
தீயவனோடு நட்புக்கொள்ளின், அவன் பட்ட கடனெல்லாம் தன் தலைமேற் சுமத்தலானும், அவன் செ-த குற்றங்கட்குரிய தண்டனைகளைத் தானும் அடைதலானும், அவன் பகையெல்லாந் தன்னையுந் தாக்குதலானும், இறுதியிற் சாதல் அல்லது சாதற்கேற்ற நோதல்தான் விளையும் என்பதாம். 'ஆ-ந்தா-ந்து' என்னும் அடுக்குப் பன்மை அல்லது தொடர்ச்சிபற்றியது.
793. குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா
வினனு மறிந்தியாக்க நட்பு.