48
திருக்குறள்
தமிழ் மரபுரை
கொள்ளல் வேண்டும். ஆதலால், 'உக்க அமிழ்தற்று' என்பதை அமிழ்து உக்கதற்று என்று மாற்றிக்கொள்வதே தக்கதாம். இனி, அங்ஙனமன்றி, 'கோட்டி கொளல்' என்பதற்குக் கோட்டி கொள்ளும் சொல் அல்லது சொற்பொழிவு என்று பொருள்கொள்ளினும் பொருந்துவதாம். குறளின் போக்கையும் ஓசையையும் நோக்குமிடத்து,
"குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
(338)
"குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
(758)
என்பவற்றிற்போல, உவமம் முன்னும் பொருள் பின்னுமாக ஒரே சொல்லியமா- (வாக்கியமா-) அமைந்திருப்பது விளங்கித் தோன்றுதல் காண்க. பரிமேலழகர் கருத்தே ஆசிரியருக்கு இருந்திருக்குமாயின்,
அங்கணத்து ளுக்க வமிழ்ததனாற் றங்கணத்து
ரல்லார்முற் கோட்டி கொளல்
என்றோ,
தங்கணத்த ரல்லார்முன் சொல்லல் சொலினஃதாம்
அங்கணத்து ளுக்க வமிழ்து
என்றோ, தெளிவாக யாத்திருப்பர். மேலும், இக் குறளை இரு சொல்லியமாகக் கொள்வது, 'சொல்லின் அது' அல்லது 'கொள்ளின் அது' என்னும் இரு சொற்களை அவாவி நிற்றலும், அவையின்றேல் உவமம் பொருளின்றித் தனித்து நிற்றலும், காண்க.
இனி, அங்கணத்தை வடமொழிப் பொருட்படி, முற்றம் என்றார் பரிமேலழகர். அது தென்சொல்லென்பதும் அதன் முதற்பொருள் சா-கடை (சாலகம்) என்பதும், அவர் அறிந்திலர். சா-கடை (சாக்கடை) வாட்டஞ் சாட்டமாக இருந்தால்தான் அழுக்குநீர் அதன் வழியாக விரைந்தோடும். அல்லாக்கால், உள்முற்றத்தின் கோடியிலும் வீட்டோரத்திலும் தேங்கி நிற்கும். அங்கணம் என்னும் சொல்லும் சா-தல் என்னும் வேர்ப்பொருளதே.
வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. இந் நாற்சொல்லும் வளைதற் பொருளவாம். அங்கு + அணம்(தொழிற்பெயரீறு) = அங்கணம் (சா-கடை)