உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

தமிழ் வரலாறு






(3) பட்டயவெழுத்து வட்டமாயிராமை. வட்டெழுத்து என்பது வடிவுபற்றியதாயின், அது ஏட்டெழுத்திற்கே ழுத்திற்கே (கிரந்த வடிவெழுத்திற்கே) பொருந்துவதாகும்.

(4) ஏட்டிற்கு வளைகோட்டெழுத்தும் பட்டயத்திற்கு நேர் கோட்டெழுத்துமே இசைவாயிருத்தல்.

(5) தமிழெழுத்து அசோகக் கல்வெட்டிற்கும் வடமொழி வரவிற்கும் முந்திய தாதல்.

(6) வடமொழி நெடுங்கணக்கு

பின்பற்றியே அமைத்திருத்தல்.

தமிழ்

நெடுங்கணக்கைப்

(7) மேனாடுகளிலும் கருவிக்கேற்ப எழுத்துவடிவு வேறுபட் டிருந்தமை.

இந்திய நாகரிகம் ஆரியரதென்றும், தமிழ் எல்லா வகையிலும் வடமொழியைப் பின்பற்றியதென்றும், மேலை யறிஞர் குருட்டுத் தனமாகக் கொண்டிருந்த அடிப்படைத் தவறுகளே, தமிழெழுத்துப் பிராமியினின்று திரிந்ததென்று கொள்ளற் கிடந்தந்தன.

பண்டையெழுத்து வடிவங்களிற் சில இன்று மாறி யுள்ளன.

அவை வருமாறு:

எழுத்தின் பெயர்

ஈகாரம்

குற்றியலிகரம்

குற்றியலுகரம்

எகரம்

ஏகாரம்

ஒகரம்

ஓகாரம்

மகரம்

வீடு

பண்டைவடிவம்

இற்றை வடிவம்

ஈஈ

வீடியாங்கு

வீடியாங்கு

வீடு

எ,

க்ெ

எ, கெ

ஏ, கே

ஒ, ஒ, கொ

க்ா

கொ

ஓ,

கோ

எ, கெ

எகர ஒகரக் குறில்கள் அவற்றின் நெடில்கட்குப் பிந்தித் தோன்றி யமையால், அவற்றை வேறுபடுத்திக்காட்ட அவற்றின் மேற் புள்ளியிடப்பட்டது. வட இந்திய மொழிகளைப் பேசுவோரின் முன்னோர், எகர ஒகரக் குறில்கள் தமிழில் தோன்றுமுன் குமரிக்கண்டத்தினின்று வடக்கே சென்ற தினாலேயே, அம் மொழிகளில் இன்றும் அக் குறில்கள் இல்லை. அம் மொழிகளின் மூலமாகிய பிராகிருதங்களை வேத ஆரியர் பேசினதினாலேயே, அவர் வேதத்திலும் அவை இல்லை.