பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பொருத்தமாகக் கவி பாடுகிறார் காளமேகம். பொது மக்கள் பாராட்டு, அதிமதுரம் ஆச்சரியம். எனினும், அவனது பொறா மைத் தி கொழுந்துவிட் டு எரிகிறது. உரியினின்றும் காள மேகம் இறக்கப்படுகிறார். தெரியும் இந்த ஜாலவித்தையெல்லாம்; மரியாதை யாக உம் ஊர் போய்ச் சேரும்' என்று விரட்டுகிறான் அதிமதுரம். அதை அரசனும் ஆமோதிக்கிறான். பொது மக்கள் ஆத்திரம், முத்துப்புலவர் மனம் பற்றி எரிகிறது. காளமேகம் மனம் புண்படுகிறது; திருமலைராயன் நகர் மண்மாரி பெய்யப் பrடுகிறார். வானம் குமுறுகிறது; கட்டடங்கள் அதிர்கின்றன: மரங்கள் சாய்கின்றன; அரசன் நடுக்கம்; அதிமதுரம் ஒடுகிறான்......... அதிமதுரத்தின் கதி என்ன? திருமலைராயன் நகர் எவ்வாறாகிறது? காளமேகம் என்ன செய்கிறார்? திடுக் கிடச் செய்யும் மற்ற சம்பவங்களைத் திரையில் காணுங்கள, சுபம்! சுபம்!! சுபம்!!!