பாவேந்தரின் கடிதம்
‘ஜனநாயகம்’ ஆசிரியர், தோழர் திருமலைசாமியும், தோழர் எஸ். வி. லிங்கமும் என்னை ஒன்றில் கட்டுப்படுத்த உரிமையுடையவர்கள். மேலும் அவர்கள் ‘ஈரோடு ஷண்முகா நந்தா டாக்கி’ கம்பெனியாருக்கும் நண்பர்கள். நான் ‘பாலாமணிக்குப்’ பாட்டு எழுத வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். டாக்கீகாரர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.
ஈரோடு சென்றேன். ‘பாலாமணிக்’ குடையவர் கதா சந்தர்ப்பங்களைச் சொல்லிப் பாட்டுக்கள் மாத்திரம் எழுதக் கட்டளையிட்டார்கள். என் வாலை அவிழ்க்கச் சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறே பாட்டுக்கள் மாத்திரம் எழுதிக் கொடுத்தேன்.
நான் வீடு திரும்பும்போது, ‘பாலாமணி’யுடையவரை நோக்கி, பிரதானமாகக் கேட்ட வரம் ஒன்றே ஒன்று.
அண்ணா சம்ப்ரதாயப்படி ‘பாலாமணி’ப் பாடல்களைப் புத்தகமாக நீங்கள் அச்சடிக்கும்போது அதில் பிழையில்லாதிருக்க என்னையும் கலந்து கொள்ளுங்கள்.
அவ்வாறே வரம் கிடைத்தது. பிறகு பாலாமணி வெளிவந்தது. எனக்குக் கொடுத்த வரத்தை உடனே உறிஞ்சிக் கொண்டார்களாதலால் லக்ஷணத்தின் எதிர் முனையில் பாட்டுப் புத்தகம் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அது மாத்திரமல்ல. நான் எழுதிய பாடல்கள் சில நீக்கப்பட்டும், வேறு பாடல்கள் சில சேர்க்கப்-