பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனத்தில் பதிப்பியல் இயக்குநராகவும் பணியாற்றுபவர்.சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறையில் மதிப்பியல் பேராசிரியராக (வாழ்நாள் வரை)வும் இருந்து வருபவர், ஆய்வு மாணவர்கட்கு வழிகாட்டியாகவும் இருப்பவர்.

நாலாயிரத்திவ்வியப்பிடத்தத்தில்நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்து டாக்டர் (பிஎச்டி) பட்டம் பெற்றவர். அந்த ஆய்வு நூல் ஆங்கிலத்தில் 940 பக்கங்களில் திருவேங்கடவன் பல்கலைக் கழக வெளியீடாய் வெளிவந்துள்ளது.எம்.ஃபில்.பி.எச்.டி மாணாக்கர்களை உருவாக்கியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றுள்ளன. பெற்றும் வருகின்றன. தவிர. ஆசிரியம். கல்வி உளவியல் (5). இலக்கியம் (22), சமயம், தத்துவம்

(35. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு (13), திறனாய்வு (21). அறிவியல் 20. ஆராய் க்சி:5 ஆக 122 நூல்களை வெளியிட்டவர்.

இவர்தம் அறிவியல்நூல்களுள் மூன்றும், சமய நூல்களுள் நான்கும் தமிழக அகப் பரிசுகளையும், அறிவியல் நூல்களுள் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசினையும், அறிவியல் நூல்களுள் ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசினையும் ஆக 10 நூல்கள் பரிசுகள் பெற்றன.

இவர்தம் அறிவியல் நூல்களைப் பாராட்டிக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருங்கலைக்கோன் என்ற விருதினையும் (1968 வைணவ நூல்களைப் பாராட்டிப் பண்ணுருட்டி வைணவ மாநாடு gசடகோபன் பொன்னடி என்ற விருதினையும் (1987), தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு திரு.வி.க. விருதினையும் (10,000 வென்பொற்காககள் - 1987), இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினையும்(1991இராஜாசர் அண்ணாமலைச்செட்டியார்.அறக்கட்டளை கல்வி,இலக்கியம்,அறிவியல் என்ற மூன்றுதுறைகளில் இவர்தம் பணியைப் பாராட்டி இராஜா சர் முத்தையவேள் விருதினையும் (50,000 வெண் பொற்காசுகள் . 1994), இவர்தம் கம்பன் பணியைப் பாராட்டிச் சென்னைக் கம்பன் கழகம் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் விருதினையும் (1994-1000 வெண்பொற்காககள்). சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவர்தம்

-xii