பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் 159

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள் ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள் மரகத உருக்கின் வண்ணத் தடாகம் ஆனஉன் மெல்லுடல்”

“தாமரை பூத்த குளத்தினிலே முகத் தாமரை தோன்ற முழுகிடுவாள்! - அந்தக் கோமளவல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன்

முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் - ஒரு முழுமதி போல நனைந்திருக்கும் - தன் துகிலினைப் பற்றித் துறைக்கு வந்தாள்’

இவற்றில் நிற வடிவக் கட்புலப் படிமங்களைக் கண்டு மகிழலாம். முருகு அல்லது அழகு எங்கெங்கெல்லாம் காணப்படுகின்றது என்று கூறுகின்றார் கவிஞர் ஒரு கவிதையில்.

“காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்

கடல்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்

தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்” மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்! ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்

தனில்அந்த அழகென்டாள் கவிதை தந்தாள்’ இந்தக் கவிதையில் காளை இளம் பரிதி, கடற்பரப்பு, ஒளிப்புனல், சோலை மலர், மேற்றிசையில் இலகுகின்ற மாணிக்கச் சுடர், ஆலஞ்சாலை, கிளியின் கூட்டம் இவற்றில் சொல் அல்லது சொற்றொடர்களால் உணர்த்தப் பெறும் வண்ண, வடிவப் படிமங்களைக் கண்டு மகிழ்க.

6. பாரதிதாசன் கவிதைகள்- முதல் தொகுதி- 4. மயில் 7. பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி-11. மாந்தோப்பில் மணம் 8. அழகின் சிரிப்பு - அழகு