பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் Y 163

பூங்கோதையின் இனிய குரல் ஒலியையும் கேட்கும் வாய்ப்பாக அமைகின்றது. வானம்பாடியின் இசையில் ஈடுபட்ட கவிஞர்.

வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா? தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும் மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ? வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைளுன் தானுதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி வையத்து மக்கள் மகிழக் குரலெடுத்துப் பெய்த அமுதா?” என்னும் கவிதையைத் தருகின்றார். இதில் பல்வேறு செவிப்புலப் படிமங்கள் நம்மை வியக்கவைக்கின்றன.

சுவைப்புலப் படிமங்கள் சுவை உணர்ச்சிகளை எழுப்பவல்ல படிமங்கள் இவை. இவ்வகைப் படிமங்கள் புரட்சிக் கவிஞரின் பாடல்களில் அத்தி பூத்த மாதிரி தான்! இவற்றையும் தேடிக் காண்போம்.

சின்ன மலர்வாய்ச்சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு” என்னும் கண்ணியில் குழந்தையையும் காண்கின்றோம்; கன்னல் சாறு, கனிரசம் இவற்றின் சுவையையும் அநுபவிக்கின்றோம்.

“வீட்டின் உட்புறத்து விளைந்த தான இனிய யாழிசை கணிச்சாறு போலத் தலைவன் தலைவியைத் தழுவலாயிற்று” என்னும் அடிகளில் கனிச்சாறு போல இனிக்கும் யாழிசையைக் கேட்டாலும் களிச்சாறின் சுவை நாவில் இனிக்கின்றது; சுவைப்புலப் படிமத்தைத் துய்க்கின்றோம்.

17. பா.தா. கவிதைகள் - இரண்டாம் தொகுதி - பக்கம் 36 18. பாதா.கவிதைகள் முதல் தொகுதி 41 ஆண்குழந்தைத் தாலாட்டு-பக்கம்.125 19. பாதா. கவிதைகள் - இரண்டாம் தொகுதி-16 பெற்றோர் இன்பம்- பக்கம் 59

12