164 பாவேந்தரின் பாட்டுத்திறன்
“புதியதெறிப் “பாஞ்சாலி சபதம்’ போலே தேனினிப்பில் தருபவர் யார்?”
என்னும் அடிகளில் “தேனினிப்பின் சுவைப்புலப் படிமமாக நாவில்
தேன்போல் இனிப்பதை உணர்கின்றோம். இல்லையா? மேலும்,
“வாய்ம ணக்கவே உடல்ம ணக்கவே வட்டில் தெய்யோடு கட்டித்தயிர் ஏடு திறைப் பால்தரும் கறவை” “கணிச்சாறு போற்பல நூலெல்லாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு “தெள்ளு தமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ்மறவர்” ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித் தேனில் துவைத்தெடுத்து தின்என்று தாரேனோ?”
- 22
தேரடியில் கண்ட அவள்
தேனிதழைத் தந்தவுடன் ‘ஊருக்கெனைக் கூட்டிச் செல்க’
- 3 *x s எனறாள
என்ற அடிகளிலும் சுவைப்புலப் படிமங்களைத் துய்த்து மகிழலாம்.
நாற்றப்புலப் படிமங்கள்: மூக்கினால் முகர்ந்து அநுபவிக்க வேண்டிய காட்சிகள் இவை. பாவேந்தரின் பாடல்களில் இவை அரியனவாகவே காணப்பெறுகின்றன; இவையும் முருகுணர்ச்சியை நல்குகின்றன.
“மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கர்ப்பூரப் பெட்டகமே”
20. பாதா, கவிதைகள் இரண்டாம் தொகுதி 26. மகாகவி - 83 21. இசையமுது கறவை - பக்கம் 27
22. இசையமுது கறவை - எழுச்சி - 38 23. இசையமுது கறவை - இன்பத் தமிழ் பக்கம் 42 24. இசையமுது கறவை - தாலாட்டு - பக்கம் 55 25. காதல் நினைவுகள் - அவள்மேற் பழி 26. பாதா.கவிதைகள் முதல் தொகுதி-2 பெண் குழந்தைத் தாலாட்டு- பக்கம் 27