பாடல்கள் பகரும் செய்திகள் 237
அக்கரைக்கண் தோன்றிடும்
அழகு நிலவினில் இறங்குவாய்” என்று வெண்ணிலவில் இறங்கும் பெண்ணைப்பற்றிப் பேசுவார்.
பிறிதொரு பாடலில்,
“காமராசர் கருத்து முழுவதும் தமிழர் நலத்தையே தழுவியதாகும் ஆதலால் அவரை ஆதரிப்பது நம்மனோர் கடன்எனப்” பெரியார் இத்தாள் சாற்றும் மொழியில் என்ன தவறு?
தாழ்நிலை அகற்றித் தமிழர்க்கு வாழ்நிலை வகுக்கும் பெரியார் வாழ்கவே!” என்று மொழிவார்.
“மீட்சிப் பத்து” என்ற தலைப்பில், எவர்தாம் தலைவர்? நல்வழி
காட்டுவோர் யாவர்? இந்நாள் யார்தாம் தமிழரைக் காக்கப் பிறந்தார்? இனிப்பிறவாள் யார்தாம்? அவர்தம் பெரியார்தாம்
இல்லையெனில் பிறகு யார்தாம் புகலுவீர் யார்தாம்
புகலுவீர் இம்மாநிலத்தே? என்று புகழ்வர். இன்னொரு பாடலில் “பெரியார்” என்ற தலைப்பில் உள்ள பாடலில், பாவேந்தர் பெரியாரை இவ்வாறு காட்டுவார்.
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு வஞ்சகர்க்கோர் கொடிய நெருப்பு மிக்க பண்பின் குடியி ருப்பு விடுதலைப்பெரும் படையின் தொகுப்பு
7. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது. பக்கம் 58 8. நாள் மலர்கள் பக்கம் 100 9. வேங்கையே எழுக! - பக்கம் 66