14 v. பாவேந்தரின்பாட்டுத்தின்
கண்ணுண்ண உண்ணக் கருத்தினி லின்பக் கடல்வத்து பாய்ந்திடுதே’ எள்பவையும் வானைப்பற்றியவையே. இங்ஙனம் வான் பாடு பொருளாக அமைகின்றது.
(ஆ) ஞாயிறு ஞாயிறு பற்றி இரண்டு பாடல்கள்:
ஒளிப்பொருள் நீ! நீ ஞானத் தொருபொருள் வாராய்! களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்
கனற்பொருளே ஆழ நீரில் வெளிப்பட எழுந்தாய் ஒகோ
விண்னெலாம் பொன்னை அள்ளித் தெளிக்கின்றாய்; கடலிற் பொங்கும்
திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய்.”
கடலின் மேலே தோன்றி - நீ
காலைப் பொழுதைச் செய்வாய் நடுவானத்தில் நின்று - நீ
தண்பகல் தன்னைச் செய்வாய் கொடிமேல் முல்லை மணக்கும் - நல்
குளிர்ந்த தென்றல் வீசும் படிநீ மாலைப் போதைப் - பின்
பரிவாய்ச் செய்வாய் வாழ்க’ - என்பவை ஞாயிறு பாடுபொருளாக அமைந்ததைக் காட்டுகின்றன.
(இ) நிலவு: நிலவு பற்றிய பல பாடல்கள் கவிஞர் வாக்கில் பிறந்துள்ளன.
வில்லடித்த பஞ்சு
விட்டெறிந்த தட்டு முல்லைமலர்க் குவியல்
முத்தொளியின் வட்டம்
23. பாதா.க. தொகுதி - 1 பக்கம் 82 24. அழ. சிரிப் பக்கம் 26 25. இளை. இலக். பக்கம் 26-27.