பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டிட வேண்டும் என்னும் உணர்வுமின்றி வாழ்கின்றனர். இதனை எண்ணி வருந்திய புரட்சிக் கவிஞர்,

“தமிழரின் தமிழ்க் குழந்தை

தமிழ்ப்பெயர் பெறுதல் வேண்டும்” (பக்.55)

என்று பாடித் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டிட வேண்டும் என்று ஊட்டிய உணர்வினை இந்நாள் தமிழர்களுக்கும் கட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் சுப்பு ரெட்டியார்.

இப்படிப் பாரதிதாசன் அவர்களின் பாடல்கள் பலவற்றிலும் காணப்படும் சிந்தனைத் திறன்களைத் தொகுத்துரைக்கும் பேராசிரியர் சுப்பு ரெட்டியாரின் அரிய முயற்சி போற்றுதற்குரியதாகும். தமிழ்ச் சமுதாய மக்கள் அனைவரும் கற்றுத் தெளிந்து, சுவைத்து, உணர்ந்து, மகிழத்தக்கது அவர் படைத்துள்ள “பாவேந்தரின் பாட்டுத்திறன்’.

விக்க f

“--

(மு. கருணாநிதி)

- vii