பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

unoogiest-sqьudosaveoёвұрғыһ 113 கள் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நடிகவேள் M.R.ராதா, குணச்சித்திர நடிகர் S.V. சகஸ்ரநாமம், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், நாரண. துரைக்கண்ணன், கவிஞர் கண்ணதாசன், திருமதி அனுசூயா தேவி ஆகியோர் அவ்விழாவில் வாழ்த்துரை வழங்குவர் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அவ்விழாக் குழுவில் சினிமா ஆர்ட் டைரக்டர் அம்மையப்பன், கவிஞர் தஞ்சைவாணன், திரைப் பட நடிகர்கள் 0.A.K. தேவர், R. பக்கிரிசாமி, புதுவைத் தமிழழகன், எண்ணுரர் கொத்தாரி உர உற்பத்திச்சாலை பொது மேலாளர் நல்லபெருமாள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பாவேந்தரின் 'பாரதப் பாசறை என்ற நாடகம் வழக்கறிஞர் W.P. இராமன் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த விழா எந்த அளவு வெற்றிகரமாக நடைபெற்றது என்று தெரியவில்லை. அடுத்த ஆண்டு பாவேந்தரின் 75ஆவது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்குச் சிலர் முயற்சி எடுத்துக் கொண்டனர். இறங்கு துறையிலேயே நீத்தானது போல் விழாக்குழு அமைப்பதிலேயே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விழா முயற்சி உடைந்தது. இவ்வமைப்புக் குழுச் சண்டையில் என் தம்பி முருகரத்தனத்தின் பெயரும் அடிப்பட்டது. சென்னை சென்று இதைப் பற்றி அறிய வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் பாவேந்தரிடமிருந்தே இதுபற்றி ஒரு கடிதம் வந்தது. அதில் நாள் குறிப்பிடவில்லை. கடிதம் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் என்னை வந்தடைந்தது. அக்கடிதம் முகவரி அச்சிட்ட அவர் கடிதத்தாளில் (Letterpad) எழுதப்பட்டிருந்தது. ஒவியர் சர்மா தீட்டிய பாவேந்தரின் வண்ணப்படம் அத்தாளின் உச்சியில் மூன்று வண்ணத் தில் அழகாக அச்சிடப்பட்டிருந்தது. இதுதான் பாவேந்தரிடமிருந்து எனக்கு வந்த கடைசிக் கடிதம். பாவேந்தர் பாரதிதாசன் 10, இராமன் தெரு தியாகராய நகர், சென்னை-17 அன்புள்ள தோழர்க்கு; 15 நாள் முன்னர் என்னிடம் நாரண துரைக்கண்ணர் வந்தார். சென்னையில் உங்கள் 75ஆண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடப் போகின்றோம். உங்களிடம் அது பற்றி அனுமதி கோருகிறோம் என்றார் - நன்று என்றேன். மேலும் நான் அவரிடம் சொன்னது என்ன என்றால்-பலர் இவ்வாறு