பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{4 நினைவில் நின்றவை என்னை அனுமதி கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்களே. பதில் எழுதி அனுமதியும் கொடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அப்படியானால் விழாவுக்கென மத்தியக்குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். நன்று என்றேன். இதை நும் தம்பி முருகரத்தினத்திடம் கூறினேன். எல்லாம் எனக்குத் தெரியும், நான் நாரண துரைக்கண்ணனிடம் கலந்து ஏற்பாடு செய்து கொள்ளுகிறேன் என்றார். மறுநாள் வந்தார். அந்த மத்தியக் கமிட்டியில் நெடுஞ்செழியன், சிற்றரசு முதலியவர்களைப் போடலாமல்லவா? என்றார். கடுமையாக மறுத்தேன். பிறகு வீரமணியைப் போடலாமா என்றார். மறுத்தேன். எஸ். இராமநாதன், முன்னாள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மணவாள ராமானுஜம், வி.பி. இராமன், அகிலன் முதலியவர்களைச் சொன்னேன். அவர் அவர்களை மறுத்தார். இன்று.அதாவது பதினைந்து நாட்களுக்குப்பின் ஆர்ட் டைரக்டர் அம்மை அப்பன் வாயிலாகச் சேதி அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு யாரையாவது கொண்டு விழாவை நடத்திக் கொள்ளச் சொல்லுங்கள் என்றுநான் இவர்களைக் கேட்டதுண்டா விழா நடத்தச் சொல்லி? இதை உங்களிடம் சொல்லி வைத்தேன். பாரதிதாசன் N.B.இதனுடன் திரைப்படத்தில் மகாகவி பாரதி என்ற அறிக்கைகள் 3 அனுப்புகிறேன் உங்களுக்கொன்று. ஏ. சித்தையன்.அவர்கட்கு ஒன்று.தனபால்ஜவுளி அவர்கட்கு ஒன்று சேர்த்துவிடுக பா. பாரதியின் வரலாற்றை விரைவில் எழுதி முடித்துவிட வேண்டு மென்று பாவேந்தர் என்னிடம் கூறியதாக நான் முதலிலேயே குறிப்பிட்டுள்ளேன். அப்பணி 1964ஆம் ஆண்டு ஏப்ரலில் தான் முற்றுபெற்றது. அப்பணி முற்றுப்பெறுவதற்குக் காத்திருந்ததுபோல் இருந்துவிட்டு, அப்பணி முடிந்ததும் அவர் உயிர் பிரிந்தது. சென்னைக்கு வந்து 'பாரதிதாசன் பிக்சர்ஸ்’ படக்கம்பனியை ஆரம்பித்துப் பாவேந்தர் பல துன்பங்களுக்கு ஆளானார். இப்படக் கம்பனியே அவர் பட கம்பனியாயிற்று; இறுதி ஐந்தாண்டுகள் அவர் 1. பாவேந்தர் அறிக்கையைப் பிற்சேர்க்கை-5இல் காண்க.