பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்?-Qqьudossosoёвұрғыһ 1 #5 மன அமைதியை அடியோடு குலைத்தது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து வரவேண்டிய அவர் சாவுக்குக் கட்டியம் கூறியது. பாண்டியன் பரிசு பெரிய அளவில் ஒரு வரலாற்று வண்ணத்திரைப் படமாக வெளிவர வேண்டும் என்பது அவர் இடையறாத ஏக்கம், சென்னைக்கு வந்து ஒராண்டில் அவ்வெண்ணம் பட்டுப் போயிற்று. அதன் பிறகு ஒர் ஆங்கிலக் கதைக்குச் சினோரியோ எழுதினார். அதுவும் கனவாயிற்று என்றாலும் அவருடைய படம் பிடிக்கும் ஆசை தீரவில்லை. சாவதற்கு ஒரு திங்கள் முன்பாக அவர் உள்ளத்தில் ஒரு பெருத்த உந்துதுல் ஏற்பட்டது. பாரதியின் வாழ்க்கையையாவது படமாக எடுத்து முடித்துவிடவேண்டும் என்று எண்ணினார். 'கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தை பார்த்தபோது இவருள்ளத்தில் இந்த எண்ணம் முதலில் முளைவிட்டதாம். அப்படத்தில் நடிகர் திரு. S.V. சுப்பையா பாரதியாராகத் தோன்றி உணர்ச்சி பொங்க வீராவேசமாக நடித்தது இவருள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. "அப்படியே பாரதியார் போலவே இருந்தது. ஆகா! என்ன நடிப்பு! வேறு யாரும் பாரதியார் வேடந்தாங்கி அப்படி நடிக்க முடியாது. அவரைப் போட்டு மகாகவி பாரதியார்' என்ற படத்தை எடுக்க வேண்டும்! என்று பாவேந்தர் அடிக்கடி கூறியது என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. 'மகாகவி பாரதியார் படமெடுத்தால் தமிழ்நாட்டு மக்கள் தமக்குக் கட்டாயம் ஆதரவளிப்பார்கள் என்று நம்பினார். சென்னை நடிக நண்பர்கள் எப்படியாவது கைகொடுப்பார்கள் என்று அவர் உள்ளத்தில் ஒட்டி ஊசலாடிக் கொண்டிருந்த ஒட்டடையைத் துடைத்தெறிந்து விட்டுப் புதிய திட்டம் ஒன்று வகுத்தார். அத் திட்டத்தின் முதல் கட்டம்தான் திரைப்படத்தில் மகாகவி பாரதி' என்ற அறிக்கை. தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் பாவேந்தருக்கு நண்பர் பட்டாளமும், அடியவர் திருக்கூட்டமும் உண்டு. ஒரு பெரிய அரசியல் தலைவருக்குரிய மக்கட் கூட்டம் இவர் பின்னால் உண்டு. இத்திருப் பணியைப் பாவேந்தர் சென்னைக்குக் குடிவந்த புதிதில் 1960லேயே துவக்கியிருந்தால் அவர் வாழ்க்கையின் ੋngd த் திரைப் க்கப் பாவேந்தர் முயன்றார். ti»