பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| #6 , நினைவில் நின்றவை இறுதி நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் கழிந்திருக்கும். செல்வ வளத்தோடும் வாழ்ந்திருக்க முடியும். என் விண்ணப்பம் இதுதான் எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் இப்பெருந் தொழில் நாட்டுவம் வாளிர் என்று பாவேந்தர் இவ்வறிக்கையின் மூலம்விட்ட வேண்டுகோள் காலங்கடந்த வேண்டுகோள் ஆகிவிட்டது. தயிரைக் கடைவதற்கு எடுத்து மத்தை உள்ளே விட்டவுடன் பானையே உடைந்து விட்டது. இவ்வேண்டுகோள் ஒரிரண்டு ஆண்டுகளுக்கு முன் பாவேந்தரிட மிருந்து வெளியாகியிருந்தால் படம் பிடிப்பதற்கான பெருந் தொகையைத் தமிழ்நாட்டு மக்களே திரட்டிக் கொடுத்திருப்பார்கள். அப்போது காமராசர் தான் முதலமைச்சராக இருந்தார். தமிழக அரசின் ஆதரவும் ஒத்துழைப்பும் கூட இவருக்குக் கிடைத்திருக்கும். படத்துறையை நம்பிச் சென்னை வந்ததால் பொன்னான அவர் உழைப்பும், கைப்பொருளும் வீணாயின. அவருடைய தகுதிக்குக் குறைவான பலருடைய வாசலில் போய் நின்றதால், வாழ்நாள் முழுவதும் அவர் இறுமாப்போடு காத்துவந்த மானஉணர்வும், மரியாதையும் கூடக் காயம்பட்டன. இவை எல்லாவற்றையும்விட ஒரு நாட்டின் பெருங்கவிஞன் வாழ்க்கையின் முதிர்ந்த நிலையில் பெறக்கூடிய பெருஞ்சிறப்புகளையும் மரியாதைகளையும் கூட இவர் இழக்க வேண்டி நேரிட்டது. பாரதீய ஞானபீடம் 1964ஆம் ஆண்டுக்குரிய ஓரிலக்க ரூவாய் இலக்கியப் பரிசை இவருக்கு வழங்குவதாக இருந்தது. அதற்குரிய பூர்வாங்க வேலைகளெல்லாம் கூட முற்றுப் பெற்றுவிட்டன. இப் பரிசு வாழும் கவிஞர்களுக்கு வழங்கும் பரிசு 1964ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் இவர் இறந்ததும், இவருக்குக் கிடைக்கவிருந்த இப்பரிசு மலையாளக் கவிஞரான சங்கரகுருப்பிற்குக் கொடுக்கப்பட்டு விட்டது. இது பாவேந்தருக்கு மட்டுமன்று; தமிழ்க் கவிதைத் துறைக்கும் தமிழ் நாட்டுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். பாவேந்தருக்கும் தமிழ்க்கவிதைக்கும் கிடைக்கவிருந்த பெருஞ்சிறப்புப் பறிபோனது பற்றி நான் மிகவும் வருந்தினேன். இப்பரிசுக் குழுவில் ஒர் உறுப்பினராக இருந்த திருவாளர் காரைக்குடி சா.கணேசன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இதுபற்றி விசாரித்தேன். அவர் அன்பு கூர்ந்து இது பற்றிய விளக்கத்தை எனக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்கள். அவர் கடிதத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.