பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 iளத்தில் έσώαρά ● 够 வேலையில் மூழ்கியிருந்தேன். முருகு வழக்கம் போல் தமக்கு ஏற்பட்ட ஐயத்தைக் கேட்டிருப்பார் போல் தெரிகிறது. கவிஞர் உடனே உரத்த குரல் கொடுத்துப் பொன்னடி என்று என்னை அழைத்தார். நான் சென்றதும், இப்படி உட்கார் என்று திரு. முருகு சுந்தரம் பக்கத்தில் என்னை அமரச் செய்து, அவர் கேட்ட கேள்வியை எனக்குத் தெரிவித்து, அதற்குரிய விளக்கத்தையும் சொன்னார். பிறகு, சரி! நீ போய் உன் வேலையைக் கவனி என்று என்னை அனுப்பினார். அன்று கவிஞர் எங்களுக்குக் கூறிய விளக்கம், 'கவிதையில் குற்றியலுகரப் பிழை ஏற்படாமல் எப்படி எழுதுவது? என்பது பற்றியாகும். தாம் ஒருவருக்குச் சொல்லும் விளக்கத்தைகவிதைக் கலை நுணுக்கத்தை-அத்துறையில் வளரத் துடிக்கும் மற்றொருவரும் தெரிந்து கொள்ளட்டும் என்ற கவிஞரின் பரந்த எண்ணத்தை இன்றைக்கு நினைத்தாலும் இதயம் சிலிர்க்கிறது. தமக்குத் தெரிந்த தொழில் நுணுக்கத்தை இன்னொருவன் தெரிந்து கொள்ளக்கூடாது என்று திரைபோட்டு, உலகின் பொது நலத்திற்குக் கேடு செய்யத் துடிக்கும் கூட்டத்தினரின் நடுவில், கடற்கரையில் அண்ணாந்து நிற்கும் கலங்கரை விளக்கமாகப் பாவேந்தர் காட்சியளிக்கிறார். சீனப்போரும் சைவ உணவும் சீனப்போரில் இந்தியா தோல்விகளைத் தழுவிக் கொண்டிருந்த நேரம். இந்திய வீரர்கட்கு உணர்ச்சியூட்டும் கவிதைகளை ஏராளமாகக் கவிஞர் படைத்துக் கொண்டிருந்த வேளை. வெளியூரிலிருந்து வந்திருந்த சில இளங்கவிஞர்களும், சுவைஞர்களும் புரட்சிக் கவிஞருடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர். நண்பகல் சாப்பாட்டுவேளை நெருங்கவே கவிஞர் தமது வழக்கப்படி (அதாவது வீட்டில் எத்தனை பேருக்கு உணவு தயாரிக்கப்பட் டுள்ளது என்பதையும் கேட்டறியாமல் வந்திருக்கும் விருந்தினருக் கெல்லாம் இலை விரிக்கச் சொல்லிடுவிடுவார்.) "நீங்கள் எல்லாரும் இன்று மதியம் இங்கேதான் சாப்பிட வேண்டும். நல்ல வஞ்சிர மீன் வருவல், இறால் பிட்டு மணமாகத் தயார் செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார். அவ்வாறு கூறிக் கொண்டிருந்தவர், எதிரில் முகத்தைச் சுளித்து ஒரு மாதிரியாக உட்கார்ந்திருந்த இருபது வயது மதிக்கத்தக்க ஒல்லியுடம்பு இளைஞரைப் பார்த்து ஏம்ப்பா... இதெல்லாம் நீ சாப்பிடுவேல்ல? என்று அன்போடு கேட்டார். அந்த நோஞ்சான் உடம்புக்கார இளைஞர், "இதெல்லாம் எனக்குப்