பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 15 வரலாறு உலக இலக்கியவாதிகளின் நெஞ்சில் நிலையான இடத்தைப் பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பாவேந்தர் வாழ்க்கையில் உணர்ச்சிமயமான எவ்வளவோ செய்திகளை எழுதும்போது, இடையிடையே அவரைப் பற்றிய மிகச் சாதாரணமான செய்திகளையும் எழுதியிருக்கிறேன். அவற்றைவிட்டுவிட எனக்கு விருப்பமில்லை. கவிதை எழுதும்போது, காற்புள்ளியும் அரைப்புள்ளியும் இல்லாமல் எழுத முடிகிறதா? பாவேந்தரைப் பற்றி வரலாற்று நூல்களும் நிறைய வர வேண்டும்; திறனாய்வு நூல்களும் வரவேண்டும். மேலை நாட்டார் கவிதை பற்றியும், கவிஞர் பற்றியும் புதுப்புது முறைகளில் வகுத்தும் தொகுத்தும் எழுதி வெளியிடும் நூல்கள் அளவற்றவை; அமைப் பாலும் உள்ளடக்கத்தாலும் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. அவற்றைப் பார்க்கும்போதும் படிக்கும் போதும் தமிழில் இத்தகைய நூல்கள் வருமா என்று நான் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. ஒரு கவிஞன் இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் அவனைப் பற்றிய வரலாறுகள் எல்லாம் எழுத்தில் வந்துவிட வேண்டும். ஏனென்றால் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் அக்கவிஞனோடு நெருங்கிப் பழகிய தலைமுறை மறைந்து விடும். அதன்பிறகு எழுதப்படும் நூல்களுள் புனைந்துரை இடம் பெற்றுவிடும். கவிஞன் அவதார புருஷன் ஆகிவிடுவான்; நாக்கில் எழுதக் காளியும், மாரியும் வந்து விடுவர். பாவேந்தர் வாழ்ந்த புதுவை, ஃபிரெஞ்சுப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் கலந்து செழித்த மண். அம்மண்ணுக்கே உரித்தான சில பழக்க வழக்கங்களும், பண்பாடுகளும், சொற்களும், தொடர்களும் குடும்பவிளக்கிலும் பிற காப்பியங்களிலும் மலிந்து காணப் படுகின்றன. புதுவைப் பண்பாட்டில் ஊறிய தமிழறிஞர்கள் அப்பண்பாட்டின் அடிப்படையில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். 18ஆம் நூற்றாண்டில் ஃபிரெஞ்சுப் புரட்சி உலகத்திற்குப் பிரகடனப்படுத்திய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் பாதிப்புகள் இவருடைய துவக்ககாலப் படைப்பு களில் அதிகம் காணப்படுகின்றன. பாவேந்தர் கூறும் பொது வுடைமைக் கருத்துக்கும், இன்றைய கட்சிப் பொதுவுடைமைக்