பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 stësib Bonteistunggi பிள்ளையான எனக்கு இளம்பிராயத்திலே இருந்ததும் அச்சம்; இப்போதும் அச்சந்தான்! கவிஞனான உனக்கு இளம் வயதிலிருந்தே அச்சம் என்பது இன்னதென்று தெரியாமல் போய்விட்டது” என்று கூறினார் அரங்கநாதன். அச்சந்தவிர் என்றார் பாரதி. அச்சத்தின் வேர் மடமை என்றார் பாவேந்தர். பாடல்களில் மட்டுமல்லர்; வாழ்க்கையிலும் அச்சத்தை அறியாதவர் என்பதற்குப் பல சான்றுகள் உள. ஒரு நிகழ்ச்சி பாவேந்தரே கூறுகிறார் கேளுங்கள்: புதுவையில் அடைக்கலமாகியிருந்த பாரதியார் குழாத்துக்கு அயல் நாடுகளிலிருந்து அடிக்கடி செய்திகள் வரும். என் மூலமாகத்தான் புரட்சி வீரர்க்குத் தகவல் போய்ச் சேரும். இதைப்பற்றி அன்றைய ஆங்கிலத்துப்பறிவாளர்க்கும் தெரியும். வந்த தகவல் என்ன என்பதை அறிந்து கொள்ளத் துடிப்பார்கள். அவர்களை மடக்கி அனுப்புவது தான் எங்களுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது. மாடசாமி புதுவையில் தங்கியிருந்ததை அறிந்து கொண்டு துப்பறிவாளர்கள் புதுவையில் மொய்த்தார்கள். மாடசாமியைப் புதுவையிலிருந்து அயல் நாட்டுக்கு அனுப்பிவிடுவது என்று முடிவு எடுத்தாகிவிட்டது. ஆனால் அதுவரைக்கும் மாடசாமியைக் காப்பாற்றியாக வேண்டுமே! மயூரேசன் என்பவர் அன்றைய வால்காட் கம்பெனியில் வேலை செய்தவர். ஆங்கிலத் துப்புத் துலக்கிகளுக்கு அவர் உளவு சொல்லிக் கொண்டிருந்தார். இந்த மயூரேசன் அரவிந்தர் வீட்டிலிருந்த புரட்சிக் கருத்துக்கள் அடங்கிய ஐந்து நூல்களை எப்படியோ களவாடிச் சென்று விட்டார். இந்த விபரம் எனக்குத் தெரியும். ஒருநாள் நடராஜாச்சாரியின் நாடகம் பார்த்துவிட்டுத் திரும்பிய அரங்கநாதனும், நானும் சற்றும் எதிர்பாராமல் மயூரேசன் வீட்டில் எட்டிப் பார்த்தபோது அரவிந்தர் வீட்டிலிருந்து களவாடப்பட்ட புத்தகங்களும் பக்கத்தில் ஒரு கைத்துப்பாக்கியும் இருக்கக் கண்டு, பளிச்செனத் தோன்றிய ஒரு தந்திரமாக, அவற்றை எடுத்துக் கொண்டு வந்து விட்டோம். மறுநாள் மாடசாமியிடம் அந்தத் துப்பாக்கியைத் தந்து ஈஸ்வரன் தருமராஜா கோவில் தெருவிலிருக்கும் பாரதி வீட்டுக்குச் சென்றோம். துப்பறிவோரும் மயூரேசனும் தொடர்வது தெரிந்தது. எதிரிலிருந்த காமாட்சியம்மன் கோவிலில் புகுந்து அதற்கருகிலிருந்த ஒரு வீட்டில் மாடசாமியை ஒளித்துவிட்டேன். மீண்டும் காமாட்சியம்மன் கோவில் உட்புறம் நுழைந்து சுற்று மதிற்கூவர் மீது ஏறிப்பக்கத்தில் உள்ள தெருவில