பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-இருபல்கலைக்கழகம் 185 மாதம் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அச்சுத் திருத்தராகப் (Proof reader) பணிபுரிந்து வந்தார். சென்னை எஸ்.எஸ்.வாசன் குடியரசுப் பத்திரிகையின் விளம்பர முகவராக (Publicity Agent) இருந்தார். நான் சுயமரியாதை இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன். பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பும் பாடல்களுக்கு முதன்மை கொடுத்துக் குடியரசில் அடிக்கடி வெளியிட்டு வந்தோம். பாவேந்தர் பாரதிதாசன் அப்போது அடிக்கடி ஈரோடு குடியரசு அலுவலகத்துக்கு வருவார். 'பாரதிதாசன் கவிதைகள் எனும் பெயரால் அவரது கவிதைகளிற் சிலவற்றைத் திரட்டி வெளியிடும் முதல் முயற்சியில் பங்கு பெற்றவன் நான் என எண்ணும்பொழுது என் உள்ளம் மகிழ்ச்சி அடைகின்றது. அதைவிட அதிக மகிழ்ச்சி உண்டாகிறது, அம்முதல் நூலுக்கு முன்னுரை வழங்கியதை எண்ணும் பொழுது, கதைக்காக ஒருமுறை, கவிதைக்காக ஒருமுறை, கருத்திற்காக ஒருமுறை, கொள்கைக்காக ஒருமுறை, உணர்ச்சிக்காக ஒருமுறை, இனிமைக்காக ஒருமுறை, எழிலுக்காக ஒருமுறை படித்தேன். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கவிதையும் ஒருபடித் தேனாகவே ருசித்தது என்பதே அம்முன்னுரை. இந்நூல் நாட்டில் நல்ல பயனை விளைவித்தது. 28.7.46இல் நானும், அன்பர் திரு.சி.என். அண்ணாத்துரை அவர்களும் சேர்ந்து நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னைப் பச்சையப்பர் பள்ளித் திடலில் பாவேந்தருக்கு ரூ.25,000 கொண்ட பொற்கிழி வழங்கினோம். பாவேந்தர் முன் கோபக்காரர். அதனால் பலரைப் பகைத்துக் கொண்டார் தமிழியக்கம் பாடிவிட்டுத் திராவிட இயக்கப் பாடல்கள் ஏன் எழுதினர்? என்று நான் கேட்டேன். அதனால் என்மீதும் அவருக்குக் கோபம். 1952ஆம் ஆண்டு அவருக்கு மணிவிழா எடுப்பதற்காகத் திருச்சியில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அமைப்புக் குழுவின் பொறுப்பாளராக நான் இருக்க வேண்டும் என்று கவிஞர் விரும்பினார். திருவாளர்கள் மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம், புத்தனேரி சுப்பிரமணியம் திருலோகசீதாராம், நாகசுந்தரம், அரு.ராமநாதன் முதலியோர் அக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். இம்மணிவிழா அமைப்புக் குழுவின் செயலாளனாகவும், பொருளாளனாகவும் நானே பொறுப்பேற்றேன். உள்நாட்டிலும், இலங்கை, மலேயா முதலிய வெளிநாடுகளிலும் நிதி வசூலைத் தொடங்கினேன். விழாவிற்கு நாளும் குறிப்பிட்டாகி விட்டது.