பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நான் அறிந்த பாரதிதாசனார் சீர்திருத்தச் செம்மலாகிய இவர் அடிமை மனப்பான்மையைக் குறிக்கும் தாசன் என்னும் பெயரை வைத்துக் கொண்டது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. பாரதியார் நாட்டு விடுதலைக்காகப் பாடினார். நமது புரட்சிக் கவிஞர் தமிழர்கட்காகவும், தமிழுக்காகவும் பாடினார். ஆதலால் நம் பாவேந்தர் பாரதியாருக்கு எந்த வகையிலும் குறைந்தவரல்லர் என்பது என் எண்ணம்” என்று நான் அவருக்குத் தெரிவித்தேன். புலவர்குழு திருச்சியிலும் தஞ்சையிலும் நடந்தபோது நான் அந்தக் கூட்டங்களுக்குச் செல்லவே இல்லை. முத்தமிழ்க் காவலராகிய கி.ஆ.பெ. விசுவநாதம் சென்னை வந்திருந்தபோது "நீங்கள் ஏன் இரண்டு கூட்டங்களுக்கும் வரவில்லை? நீங்கள் வந்திருந்தால் பாரதிதாசரைப் போல உங்களையும் யானையின்மீது ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து இருப்பேன்’ என்றார். நீங்கள் அவருக்குச் செய்தது தான் சிறப்பு. நான் அவருக்கு ஒராண்டு இளையவன் என்று கூறினேன். அடுத்த கூட்டம் மதுரையில் நிகழப் போகின்றது. அதற்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் நேரில் தெரிவித்ததோடு கடிதம் மூலமாகவும் எனக்கு நினைப்பூட்டினார். நான் அவ்விதமே மதுரைக்குச் சென்றிருந்தேன். அங்கே சோமசுந்தர பாரதியாருக்கு 70ஆம் ஆண்டுவிழா நடந்தது. அங்கே சோமசுந்தர பாரதியாரைப் பாராட்டிப் பேசினேன். அதற்கு அடுத்துச் சென்னையிலும் பிறகு சிதம்பரத்திலும் குழுக் கூட்டங்கள் நடந்தன. சிதம்பரம் கூட்டத்தில் தான் நான் முதன் முதலில் பாரதிதாசரைக் கண்டு பேசி அளவளாவினேன். பிறகு நடந்த புலவர் குழுக் கூட்டங்கட்கு எல்லாம் நானும் பாரதிதாசனும் பெரும்பாலும் சென்றிருக்கின் றோம். நாங்கள் அப்போதெல்லாம் ஒருவருக்கொருவர் அளவளாவி எங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதலுண்டு. நாங்கள் கோவைக்குச் சென்றிருந்த போது திரும்பி வருவதற்கு எனக்கும் அவருக்கும் இரண்டாம் வகுப்புப் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. பாவேந்தர் ஏறி அமர்ந்திருந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியிலேயே நானும் ஏறுவதற்குச் சென்றேன். சன்னல் பக்கமாக அமர்ந்திருந்தவர் என்னைக் கண்டதும் எனக்கு அந்த இடத்தைக் கொடுத்துவிட்டார். நான் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை. பிறகு அவர் எனக்குப் படுத்துக் கொள்வதற்கும் இடம் தந்துவிட்டு அவர் உட்கார்ந்த வண்ணமே இருந்தார். அவருடைய கட்டளைக்கு நான் இணங்க வேண்டியவனாகவே இருந்துவிட்டேன். இந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்தே அவர் என்மீது வைத்திருந்த பேரன்பினை நான் தெரிந்து கொண்டேன். அவருடைய பெருந்தன்மை வாய்ந்த