பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கவியரசர் பாரதிதாசன் கவிஞர் திருலோக சீதாராம் கவிஞர் திருவையாறு லோகநாத சீதாராம் அவர்கள் - தாமோதரனாரும், தாயுமானவரும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் வாழ்ந்த திருச்சிராப் பள்ளியில் வாழ்ந்தவர். தரணியின் முதுகு நெளியப்படை நடத்தித் தஞ்சாவூர் வரை முற்றுகையிட்ட சிவாஜியின் பேரால் தமிழ் ஏடு நடத்தி வந்தவர்; மாம்பலக் கவிச்சிங்கம் போல மனப்பாடக் கவிஞர். பாவேந்தரின் நம்பிக்கைக்குரிய பார்ப்பன நண்பர்கள் இருவர். ஒருவர் ஒவியர் வேணு கோபால சர்மா, மற் றொருவர் இந்தத் திருலோகம். பாரதியார் குடும்பத் தோடும் இவருக்கு நெருக்கமான தொடர்புண்டு. வாழ்நாள் முழுதும் சருகரிக்க முடிந்ததே தவிர குளிர் காய முடியவில்லை என்று கூறிவிட்டுச் சஞ்சலத்தோடு கண் மூடியவர். 'கந்தர்வகானம் பாடிய இக்கவிஞர் மக்கள் கானம் பாடிய பாவேந்தர் பற்றிய நினைவலைகளை, இக்கட்டுரையில் கரையிட்டுக் காட்டுகிறார். புதுவையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வீட்டைப் பொது நினைவுச் சின்னமாக்கி, கவிஞரின் மனைவியாருக்கு மானியமும் உதவி, புதுவை அரசாங்கம் பெரும் சிறப்புச் செய்திருக்கிறது. தமிழ்மக்கள் பெரு மகிழ்வு கொள்ளும் இந்த ஏற்பாட்டில் தமிழ்நாடு அரசும் பங்கு கொண்டிருக்கிறது.