பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 221 முதலில் நான் திகைத்துப் போனேன். இந்தக் கூட்டத்தார் எதற்காக நம்மைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று. ஆம் இந்த வீடுதான். நீங்கள் விசாரிக்கும் ஆசாமியும் நான்தான். என்ன வேண்டும்? என்று நான் கேட்டதும் அவர்களும் திகைத்துப் போனார்கள், தவறான விலாசத்துக்கு வந்திருக்கிறோமோ என்று. 'திருலோக சீதாராமைச் சந்திக்கும்படி பாரதிதாசன் சொல்லி யனுப்பினார். தாங்கள்தானா? என்று கேட்டார்கள். "வாத்தியார் அனுப்பியிருக்கிறாரா? அப்படியானால் நான் தான். கொஞ்சம்மேலே சென்று அமருங்கள். நான் அனுஷ்டானம் முடித்துக் கொண்டு வருகிறேன் என்றேன். வந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத் தோம். நிதிக்கு வேண்டுகோளும் விடுவிக்கப்பட்டது. தொகையும் வசூலாகிக் கொண்டிருந்தது. குழுவிற்கு நான் செயலாளன். காதல் ஆசிரியர் ராமநாதன் பொருளாளர். அன்பில் தர்மலிங்கம், பராங்குசம் ஆகியோர் எங்களுடன் விழாக் குழுவில் இருந்தனர். திடீரென்று ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. நாங்கள் குறித்திருந்த அதே நாளில் மணிவிழா தஞ்சையில் ராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெறுமென்றும் புரட்சிக் கவிஞர் நேரில் விஜயம் செய்வார் என்றும், அப்போது நிதியளிப்பும், பொன்னாடை போர்த்தலும் நடைபெறும் என்றும், யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளையின் பேரால் தினத்தந்தியில் ஒரு விளம்பரம் வெளியாயிற்று. நாங்களோ திருச்சி தேவர்மன்றத்தில் விழா ஏற்பாடு செய்து, தீவிரமான நிதி வசூலிலும் ஈடுபட்டிருந்தோம். திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் விடுத்த அறிக்கையை எதிரொலித்து மலேயா முதலிய இடங்களிலிருந்தும் பணம் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் புதிய விளம்பரத்தைக் கண்டு எங்கள் குழுத்தலைவரும் நானும் அதிர்ச்சியடைந்தோம். ஒரே நாளில் இரண்டு இடங்களில் விழாவா? கவிஞர் அன்று தஞ்சையில் நேரில் இருப்பார் என்றும் போட்டிருக்கிறதே. அப்படியானால் திருச்சி விழாவின் கதி என்ன? விளம்பரம் உண்மையா? கவிஞர் இதற்கு ஒப்புதல் கொடுத்திருப்பாரா? என்றெல்லாம் குழப்பம் ஏற்பட்டது. கவிஞருக்கு எங்கள் குழுத் தலைவரிடமிருந்து விபரம் கேட்டு ஒரு கார்டும் அதற்கு விடை வராதபடியால் தந்தியும் பறந்தன. ஒரே மெளனம்.