பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருவல்கலைக்கழகம் 253 நண்பர்களோடு ஒரு பெரிய காரில் பெரியபாளையம் புறப்பட்டார். டாக்டர் மா. இராஜமாணிக்கனார், சமணர் பூரீபால் ஆகியோர் உடன் வந்தனர் நானும் சென்றேன். அடையாறு மாணவிகள் சிலரும் எங்களுடன் வந்திருந்தனர். அங்கு பலியிடப்படும் ஆடு கோழிகளின் குருதி வாய்க்காலாக ஒடும் உயிர்ப்பலியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சமணரான பூரீபால் எங்களுடன் கலந்து கொண்டார். நாங்கள் அம்மன் கோயிலுக்கு அருகில் கூட்டம் போட்டோம். பூரீபால் உயிர்ப்பலி கூடாது என்று கூறி அருளறத்தின் இன்றியமையாமையை எடுத்துரைத்தார். பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றியும், அம்மன் பற்றிய விளக்கத்தையும் 184 புராணங்களிலிருந்தும் மேற்கோள் காட்டி விளக்க முடியும். நிர்வாணமாகக் கோவிலை வலம் வர வேண்டும் என்று எந்தப் புராணமும் எடுத்துரைக்கவில்லை. ஆண்டவன் பேரால் உயிர்ப்பலி வேண்டாம்' என்று பாவேந்தர் உருக்கமாகவும், உணர்ச்சி ததும்பவும் பேசினார். உடன் வந்த அடையாறு மாணவிகள், நிர்வாணமாக கோவிலைச் சுற்றிய பெண்களைப் பார்த்து, ஆடை அணிந்து கோவிலை வலம் வரும்படி வேண்டிக் கொண்டனர். கூட்டத்தில் இருந்த சிலர், "நிர்வாணமாகக் கோவிலைச் சுற்றுவது எங்கள் விருப்பம், நாங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகச் செய்கிறோம். அதைக் கேட்க நீங்கள் யார்?" என்று கேட்டனர். "தமிழ் நாட்டின் மானம் காற்றைப் போலவும், தண்ணிர் போலவும் எல்லார்க்கும் பொதுவானது. அதைக் கெடுப்பதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று அஞ்சாமையோடு அவர்களைப் பார்த்து கூறினார். அத்தகைய துணிச்சல் பாவேந்தருக்கு மட்டுமே உரியது. பாவேந்தர் நாத்திகர். நான் ஆத்திகன்; அம்பாளை வழிபடுபவன். ஆனால் இந்தக் கொள்கை வேவுபாடு எப்போதும் எங்கள் நட்புக்குக் குறுக்கே நின்றதில்லை. அவர் நாத்திகக் கருத்துக்களைக் காரசாரமாகப் பேசிக் கொண்டிருப்பார். நான் அமைதியாக அருகிலிருந்து கொண்டு என் வேலையைக் கவனிப்பேன். நான் நாள்தோறும் வணங்கும் அம்பாளைப் பற்றி ஒரு பாட்டு எழுதித்தரும்படி அவரை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தேன்; அவர் மறுத்துக் கொண்டிருந்தார். பிறகு என் நச்சரிப்புத் தாங்காமல் ஒரு நாள், "சரி, சொல்ற... எழுதிக்க!” என்று சொல்லிவிட்டுத் தலையணையில் முழங்கையை ஊன்றிப் படுத்துக் கொண்டே மளமளவென்று சொல்ல ஆரம்பித்தார். நானும் எழுதிக்