பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 257 அந்த டையோடு சேர்ந்து ஆணியை அடித்துவிட்டார். ஆணியை அடித்து முடித்தவுடன் நாற்காலியில் இருந்து கீழே குதிததார். டை ஆணியில் மாட்டிக் கொண்டிருந்த காரணத்தால் அவர் சுவரில் தொங்கினார். இந்தக் காட்சியைப் பார்த்த பாவேந்தர் சிரிப்பை அடக்க முடியாமல் துள்ளிக் குதித்தார். அவர் கையிலிருந்த சிகரெட் நெருப்பு அருகில் உட்கார்ந்திருந்தவரை சுட்டுவிட்டது. அவர் கோபத்தோடு என்னையா இது? கண்ணு கிண்ணு இருக்கா? நெருப்பாலே சுடரியே?’ என்று கேட்டார். அதற்கு பாவேந்தர் சிரித்துக் கொண்டே "முண்டம்! நெருப்பு சுட்ரது உனக்கு இப்ப தெரியுதா?" என்று கேட்டார். நகைச்சுவையை மெய்மறந்து எப்படி சுவைப்பார் பாவேந்தர் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. பாவேந்தருக்கு ஒவியம் தீட்ட வராது. ஆனால் ஓவியக்கலையில் நல்ல ஈடுபாடு உண்டு. ஒவியத்தைப் பற்றி அவர் கூறும் அபிப்பிராயம் சிறப்பாக இருக்கும். ஜனாதிபதி பரிசு பெற்ற திருவள்ளுவர் திருவுருவத்தை எழுதும்படி என்னை அடிக்கடி தூண்டி ஊக்கமளித்தவர் பாவேந்தரே. நான் திருவள்ளுவர் படத்தை தீட்டியபோது பாவேந்தர் அருகில் இருந்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தம் அபிப்பிராயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார். படம் ஒரளவு முற்றுப்பெறும் நிலையில் இருந்தது. அப்படத்தைப் பலரும் நடமாடுமிடத்தில் வைக்குமாறு எனக்குக் கூறினார். படம் போவோர் வருவோர் பார்வையில்பட்டு அவர்கள் கவனத்தைக் கவர்ந்தது. அதைப்பார்த்த எல்லாரும், என்ன? திருவள்ளுவர் படம் போல் இருக்கிறதே? என்று கேட்டனர். பாவேந்தருக்குப் பரம திருப்தி. சர்மா? படத்தை முடித்துவிடு' என்றார். நானும் முடித் தேன். அப்படம் அச்சேறுவதற்கும் பாவேந்தரே துணை நின்றார். அப்படம் தமிழகத்தில் பெருத்த விளம்பரம் பெற்றதோடு எனக்குப் புகழையும், ஜனாதிபதி பரிசையும், செல்வத்தையும் வாரி வழங்கியது. ஏன்? அப்படம்தான் இப்போது எனக்குச் சோறு போடுகிறது. பாவேந்தருக்குப் புதுக்கவிதை (Modern poem) பற்றியோ, புதிய ஒவியக்கலை (Modern Art) பற்றியோ தெரியாது. என்றாலும் புதிய ஒவியக்கலை பற்றி அவரிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது மிக அழகாக ஒரு கருத்தை வெளியிட்டார். 'மரம் அழுகிறது; கல்லும் கண்ணிர் வடிக்கிறது! என்று கவிதை எழுதுகிறோம். இதை எண்பிப்பது எப்படி? இதற்கு எப்படிப் படம்