பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 அவள் மேல் பழி சேலம் வேலுச்சாமி கவி இக்கட்டுரையாசிரியர் திரு.வேலுச்சாமி கவி சேலத்தில் வாழும் பழம்புலவர். ஐம்பது ஆண்டுகள் திரைப்படத் துறையில் தொடர்பு உள்ளவர்; முதியவர். பாவேந்தர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு எழுதிக் கொண்டிருந்தபோது அவரிடம் நெருங்கிப் பழகி அவர் அன்புக்குப் பாத்திரமானவர். பாவேந்தரோடு பழகிய நாட்களை நினைவுகூர்ந்து இலக்கியச் சுவை பட இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். பாவேந்தரின் சுவையான படத்துறை அனுபவங்களும், அவர் விருப்பு வெறுப்புக்களும் இதில் நிரல்படத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. அவள் மேல் பழி' என்ற பாடல் பாவேந்தர் எழுதியுள்ள காதல் நினைவுகள் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. படித்தவுடன் உள்ளத்துக்கு உணர்ச்சியூட்டி நம்மைச் சுவை மயக்கத்தில் ஆழ்த்தும் கற்பனை வளம் பெற்ற பாடல் அது. எத்தனை முறை படித்தாலும் சலிப்புணர்ச்சி தோன்றாது. அப்பாடல் பாவேந்தருக்கும் எனக்கும் இடையே விளங்கிய நட்புக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. எனக்கும் பாவேந்தருக்கும் கி.பி. 1944ஆம் ஆண்டு வாக்கில் முதன் முதலாகத் தொடர்பு ஏற்பட்டது. எனக்குச் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பிரபந்தக் கவிஞர்களிடமும், அவர்கள் படைப்புகளிடமும் பற்றும் ஈடுபாடும் அதிகம். உடுமலை முத்துசாமிக் கவிராயரின் பழக்கமும், அவர் எழுதியுள்ள இராமாயணக் கீர்த்தனைகளில் நல்ல