பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் - - 266 பாவேந்தர் பேச்சைக்கேட்க மக்கள் திரண்டு வந்தனர்; பெருங்கூட்டம். பாவேந்தர் திருக்குறளுக்கு அப்போது புத்துரை எழுதிக் கொண்டிருந்த நேரம், தலைமை தாங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியாருக்கும், பாவேந்தருக்கும் 'தெய்வந் தொழாஅள் என்ற திருக்குறள் உரையில் கருத்து வேறுபாடு தோன்றியது. இருவருமே விட்டுக் கொடுக்காத கொள்கைவாதிகள். நாவலர் அக்கருத்து வேறுபாட்டுக்குப் பிறகு திருக்குறள் வகுப்புக்கு வரவில்லை. தமிழக அளவில் பாவேந்தருடைய அன்பர்களைத் திரட்டி மதுரையில் அவருக்கு மணி விழா எடுக்கப் பாரதிதாசன் மன்றத்தில் முடிவு செய்தோம். 'டவுன் ஹாலில் மணிவிழாவுக்கு அமைப்புக்குழு கூடியது. கீழ்க்கண்டவர்கள் மணிவிழாப் பொறுப்பாளர்களாக இருக்க அவ்வமைப்புக் குழு முடிவு செய்தது. தலைவர்: நாவலர் சோமசுந்தர பாரதியார் துணைத் தலைவர்கள்: ம.பொ.சி. ஜீவானந்தம், நாரண துரைக்கண்ணன், கல்கி. பொதுச் செயலாளர் தனுஷ்கோடி ராஜா துணைச் செயலாளர்கள்: நாவலர் நெடுஞ்செழியன், பொன்னி ஆசிரியர் முருகுசுப்பிரமணியம் பொருளாளர் அறிஞர் அண்ணா பிறகு திரைப்பட நடிகர் யதார்த்தம் பொன்னுசாமியின் தலையீட் டால் மணிவிழாக் குழு திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. திருச்சிராப்பள்ளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் வேறொரு மணிவிழாக் குழு அமைக்கப்பட்டது. கவிஞர் திருலோக சீதாராம், அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், ராமசுப்பையா, காதல் அரு.இராமநாதன் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றனர். நானும் திருச்சி சென்று மணிவிழாப் பணியில் ஈடு பட்டேன். தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கிருஷ்ணசாமி நாயுடுவின் மகன் பூரீராமுலுக்குப் பாவேந்தரிடத்தில் நல்ல ஈடுபாடு உண்டு. அவர் நன்கொடையாக ரூ.500/- முதலில் கொடுத்தார். மலேயாத் தமிழ் முரசு ஆசிரியர் சாரங்கபணி ரூ. 200/- நன்கொடை வழங்கினார். ஆனால் அவ்விழா முயற்சி குழப்பத்தில் முடிந்து அரைகுறையாகத் திருவானைக்காவலில் ஒரு சத்திரத்தில் நடைபெற்றது. திருவானைக் காவலில் மணிவிழா நடந்தபோது திரு. குமாரசாமி ராஜா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். மணிவிழா அழைப்பு அவருக்கும் அனுப்பப்பட்டது. வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். ஒருமுறை குமாரசாமி ராஜா அவர்களை நான்