பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 சொந்தச் சிந்தனையாளர் ஒருமுறை உடலுறவைப் பற்றிப் பேச்சு வந்தது. என்ன இதைப் பற்றிப் பெரிசா அலட்டிக்கறிங்க... மலஜலங் கழிக்கற மாதிரி இது உணர்ச்சிக்கு ஒரு கழிவாய்!” என்று ஒரு போடு போட்டார். இந்த நாட்டில் அகமும் புறமும் படித்த எந்தத் தமிழாசிரியனும் துணிந்து இதைச் சொல்லப் பயப்படுவான். இவரிடத்தில் உள்ள ஓர் அபூர்வ குணத்தைக் கவனித்திருக்கிறேன். பெரியார் ஒருவருக்குத்தான் இவர் கையெடுப்பார்; பெரியார் வந்தால் ஒடி வரவேற்பார். மற்றவர் கையெடுத்தால்தான் இவர் எடுப்பார். இதைப் பலமுறை கவனித்த நான், ஒரு நாள் ஏன் என்று கேட்டேன். எனக்குத் தலைவர் பெரியார்தான் என்று சொன்னார். அறிஞர் அண்ணாவையே பாவேந்தர் மிகவும் சாதாரணமாகவே மதித்தார். "பெரியாரும் அண்ணாவும் இரண்டு பெரும் தமிழர்கள்” என்பார். "பெரியார் எதைச் சேர்த்தாலும் தமிழனுக்குத்தான் கொடுப்பார். இந்த யானைக்கு (பெரியாருக்கு) ஈடு யார்?" என்பார். “பார்ப்பனியம் இந்த நாட்டின் நச்சுப்பாம்பு’ என்று பெரியார் அடிக்கடி சொல்லுகிறார். நீங்கள் பாரதியைப் போற்றும் காரணம் என்ன?" என்று ஒரு நாள் கேட்டேன். 'பாரதியிடத்தில் பார்ப்பனத்தன்மை எள்ளளவும் கிடையாது. பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே!” என்று பெரியாருக்கு முன் முரசு கொட்டிச் சொன்னவன் பாரதி. நான் புரட்சிக் கவிதைகள் எழுதக் கற்றுக் கொண்டதே அவரிடம்தான். என்னை முதன் முதலில் மனமுவந்து பாராட்டியவரும் அவரே; விளம்பரப்படுத்தியவரும் அவரே. என் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்து நாளேட்டில் வெளிவர ஏற்பாடு செய்தார். இந்தக் காலத்தில் எந்தப் பார்ப்பான் நமக்கு இப்படி உதவி செய்வான்? அதனால்தான் நான் பாரதியாரைப் போற்றுகிறேன்; பாரதிதாசன் என்று புனைப்பெயரும் வைத்துக் கொண்டேன்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். ஒருமுறை சேலம் கோயம்புத்துார் லாட்ஜில் பாவேந்தர் தங்கியிருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றேன். நாங்கள் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கோவைப் பட அதிபர் ஜூபிடர் சோமு திடீரென்று உள்ளே வந்தார். தாம் எடுக்கும் திரைப்படத்துக்கு உடனே பாடல் ஒன்று வேண்டுமென்றும் இப்போதே எழுதித்தர முடியுமா என்று கேட்டார்.