பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 317 "ஏ எழுதாம...? Sequence சொல்லு!" என்றார் பாவேந்தர். பாடல் இடம்பெறும் சந்தாப்பத்தைச் சோமு சொன்னதும் சரியாகப் பத்து நிமிஷத்தில் பாட்டை எழுதிக் கையில் கொடுத்துவிட்டார். உடனே ரூ.1000/-க்குச் செக் ஒன்று கொடுத்துவிட்டுப் பாடலை வாங்கிச் சென்றார் ஜூபிடர் சோமு. நான் மலைத்துப் போனேன். ஒருமுறை பொங்கல் சமயத்தில் தருமபுரிச் சுற்றுப்பயணம் வந்திருந்தார் பாவேந்தர். பொங்கல் நாளன்று பென்னாகரம் வரும்படி அழைத்தேன். அவரும் அழைப்பை ஏற்று வந்தார். அவர் விரும்பும் உணவு வகைகளைச் சமைத்து விருந்து வைத்தேன். அவரும் மகிழ்ச்சியோடு உண்டார். பிறகு என்னைப் பாராட்டி 'அஞ்சாத நஞ்சையா என்று கவிதை எழுதினார். ஊருக்குத் திரும்பும்போது கடத்தை மானின் உப்புக் கண்டம் நான்கைந்து படி ஒரு பையில் போட்டுக் கொடுத்தேன்; அதை எடுத்துச் சென்றார். பாரதிதாசன் இந்த நூற்றாண்டில் பெரிய மேதைகளில் குறிப்பிடத் தக்கவர். அவருடைய நட்பு என் வாழ்வில் கிடைத்த அரும்பேறு.