பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uno-Soudoscosočopoub 325 எப்படியோ காலம் தாழ்ந்து ஆறரை மணி அளவில்தான் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். ஆளுநர் சிறிதுநேரம் காத்திருந்துவிட்டு முதல் பரிசுகள் இரண்டும் பெறுகிற மாணவனே வந்து சேரவில்லையே-என்று கேட்டு விட்டுப் போய்விட்டார். எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டது என்றாலும்.அதை விட அந்தச் சங்கத்தாருக்கு-நான் ஏமாற்றம் ஏற்படக் காரணமாகி விட்டேன் என்பதை எண்ணி வருந்தினேன். பின்னர் கவிஞரைக் காணச்சென்றேன். அவரும் அதைக்கேட்டு வருந்தினார். ஆனால் உடனே ஆறுதல் கூறி ஊருக்கு அனுப்பி வைத்தார். புதுவைச் சங்கத்தாரும் பரிசுகளைத் தந்து வாழ்த்தி அனுப்பினர். இருபது ஆண்டுகளுக்குப் பின் அப்பொழுது நான் எழுதிப்பரிசு பெற்ற கட்டுரையைக் கூட எனக்கு அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிட வேண்டியதாகும். ஆசிரியர் வேலை அடுத்து 1944 இல் அண்ணாமலையில் பட்டம் பெற்று சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியும் பெற்றேன். அந்த ஆண்டுகளில் ஒன்றிரண்டு தமிழ்ச்சங்க விழாக்களில்-புரட்சிக் கவிஞருடன் நானும் பேசினேன். அடுத்த ஆண்டு நிகழ்ந்த என்னுடைய திருமணத்திற்குத் தந்தை பெரியார் தலைமை ஏற்கபுரட்சிக் கவிஞரும்-அறிஞர் அண்ணாவும் மற்றவர்களும் வாழ்த்துரை வழங்குவர் என்று அழைப்பிதழ் வெளியிட்டிருந்தேன். புரட்சிக் கவிஞர்-வர இயலாத நிலையில் ஒர் அருமையான வாழ்த்துரை அனுப்பியிருந்தார். புரட்சிக் கவிஞர் என்னிடத்தில் வைத்திருந்த பேரன்பும்-பெரும் நம்பிக்கையும், அந்தக் கவிதை வரிகளில் நடனமிட்ட மொழிப்பற்றும்-இனப்பற்றும்-இயக்க ஆர்வமும், தொண்டுணர்வும், எப்படியெல்லாம் கவிஞரால் மதிக்கப் பட்டன என்பதற்கு அந்தக் கவிதை வரிகளே சான்று. அடுத்து அவர் சென்னை வரும் வாய்ப்புள்ளபோது என்னையும் சந்திக்க விழைவார். ஒரிரு முறை நண்பர் செல்லப்பா அவர்களின் பாரி நிலையத்திலும்திருவல்லிக்கேணியில் திருவாரூர் சுயமரியாதை வீரர் டி.என். இராமன் அவர்கள் தங்குமிடத்திலும் கவிஞர்தங்குவார். ஓரிரு முறை அந்நாட்களில் கலை உலகில் செல்வாக்குப் பெற்றிருந்த கவிஞர் கம்பதாசன் அவர்களோடும் எனது இல்லத்திற்கு வருவார். சிறிது நேரம் உரையாடி விடைபெறுவார்கள். - ஒருமுறை கம்பதாசன் அவர்கள், பாவேந்தரிடம் கொண்டிருந்த பேரன்பு (பக்தி என்று கூடக் கூறலாம்.) காரணமாக ஒரு பெரிய