பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பாவேந்தர் நினைவு போற்றுவோம் செய்வதே கவிதைத் தொழிலாதலின், பாவேந்தரின் உணர்ச்சி வாய்ப்பு நேரிட்ட போதேல்லாம் பொங்கிப பீறிட்டது போலும்! மும்மொழி வல்லுநரும் தனித்தமிழ் இயக்கத் தந்தையுமான மறை மலை அடிகளார் அவர்களை ஒரு முறை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்த அழைத்திருந்தோம். மறைமலை அடிகளாரை வரவேற்றுச் சிதம்பரம் தொடர் வண்டி நிலையத்தில் கூடியிருந்த மாணவர்கள் தமிழ் வாழ்க! அடிகள் வாழ்க! இந்தி ஒழிக! தமிழ் வெல்க! என்று முழக்கம் எழுப்பியது கேட்டு அடிகள் மகிழ்ந்தார். பின்னர் இராமாயணம் ஒழிக’ என்பதைக் கேட்டும் தலையசைத்தார். அடுத்து புராணங்கள் ஒழிக’ பெரிய புராணம் ஒழிக’ என்றும் முழக்கம் தொடர்ந்த போது அடிகளாருக்கு அது பிடிக்கவில்லை. அடிகளார் அதை நிறுத்தச் சொன்னார். என்றாலும் அவ்வப்போது சிலர் அந்த முழக்கத்தையும் எழுப்பி வந்தனர். அடிகளார்.தங்குமிடம் சேர்ந்தார். அங்கு என்தந்தையாரை (மறைந்த மு. கலியாண சுந்தரனார்)யும் என்னையும் அழைத்து "மற்றவை எல்லாம் நியாயம்! ஆனால் பெரிய புராணம் ஒழிக, என்பது நியாயமல்ல; அது புராணம் அல்ல; திருத்தொண்டர் வரலாறு; அது வடநாட்டினின்றும் வந்தல்ல-தென்னாட்டவருடையது! சிவனைப் போற்றும் சமயம் தென்னாட்டவருடையது! அது ஒழிக. என்பது முறையல்ல" என்று விளக்கினார். அப்பொழுது என் தந்தையார்பெரிய புராணத்தில் உள்ள அறிவுக்குப் பொருந்தாத கூற்றுக் களையும், தமிழரின் மான வாழ்வுக்கு மாறுபட்டதாக அமையும் ஒழுகலாற்றையும் கூறி, இதனை எப்படி நமது மரபாக ஏற்பது? என்று கேட்டார். அப்படி ஐயம் எழுவது, முழுமுதற் கடவுள் சிவ பெருமாளிடம் பற்றின்மையினாலேயே’ என்றார் அடிகள். 'அப்படியானால் சிவப்பற்றுக் கொண்டால் அறிவுக்கு இடமில்லையா? என்றார் என் தந்தை. எல்லாம் அவன் செயல் என்று சிவத்தை ஏற்றவர்க்குப் பெரிய புராணத்தில் எதுவும் குற்றமாகத் தெரியாது’ என்று அடிகள் விடையளித்தார். அவரிடம் கொண்டிருந்த மதிப்பால் மேலும் அதுபற்றி அவரிடம் வாதாடவிலலை. அடிகளாரோ, சிவம்-செம்பொருள் எனவும், சிவமதமே-தமிழர் சமயம் எனவும் அம்மத அடியார் தம் பெருமையைப் பேசுவதே பெரிய புராணம் எனவும் அதை ஒழிக" என்று கூறுவதைத் தாம் ஒப்பவியலாது எனவும்-விளக்கியுரைத்தார்.