பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் * - 359 இக்கட்டுரையின் மூலம் நம்மையெல்லாம் பாரதி தாசனுக்கு மிக அருகில் அழைத்துச் செல்கிறார் எஸ்.ஆர்.எஸ். பாவேந்தர் இயல்பாகவே ஒரு போராட்டக்காரர். புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை. ஏறக்குறைய 1925ஆம் ஆண்டிலிருந்து அவர் எதிர்க்கட்சியாகவே இருந்தார். அவர் ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்தார் என்று சொல்லுவதை விட அவரே ஒரு கட்சியாக-பாரதிதாசன் என்ற தனி மனிதனே ஒரு ஸ்தாபனமாக விளங்கினார். "பர்த்திலெமி என்ற பிரெஞ்சுக்காரர் ஒருவர் புதுச்சேரியிலிருந்து பிரெஞ்சுப் பாராளுமன்றத்துக்கு நின்றார். அவருக்காகப் பாரதிதாசன் தேர்தல் பணியாற்றினார். தேர்தலில் ஒட்டு எண்ணுவ தில் வீண் கலகங்கள் நடத்தி ஒட்டை எதிர்க்கட்சிக்காரர்கள் ஏமாற்றிவிடும் பழக்கம் உண்டு. கூனிச்சம்பட்டு என்ற ஊர் புதுச்சேரியில் இருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது. பாரதிதாசன் அங்கு பள்ளி ஆசிரியராய்ப் பணிபுரிந்தார். பர்த்திலெமி தேர்தலின் போது, கூனிச்சம்பட்டு ஒட்டுச் சாவடியில் பாவேந்தர் பணிபுரிந்தார். தேர்தல் அன்று மாலை ஒட்டுப்பதிவு முடிந்தவுடன் சீல் வைத்த ஒட்டுப் பெட்டியைத் துக்கிக் கொண்டு புதுச்சேரி வந்தடைந்தார். புதுச்சேரி மாநிலத் தேர்தல் அதிகாரியிடம் ஒட்டுப் பெட்டிகளை நேரில் ஒப்படைத்தார். ஒட்டுச் சாவடியிலிருந்து ஒட்டுப் பெட்டியை எடுத்து வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். தண்டனையும் அடைந்தார். அதே நேரத்தில் வேறு குற்றங்களைச் சாட்டி ஆத்மசக்தி பத்திரிகை ஆசிரியர் திரு. சாரங்கபாணிச் செட்டியார், தேச சேவகன் ஆசிரியர் சைகோன் சின்னையா முதலியார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். எல்லாரும் சில மாதங்கள் சிறையில் இருந்து விடுதலை பெற்றனர். புதுச்சேரித் தேர்தல் காலங்களில் பாரதிதாசன் ஒரு சிங்கம். அவருடைய பேனாவின் கர்ஜனையைக் கேட்டவுடன் அரசியல் நரிகள் ஊளையிட்டு ஒட்டமெடுக்கும். தேர்தல் முடிந்தவுடன் மக்கள் பல நாட்களுக்குக் கவிஞரின் தேர்தல் இலக்கியத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். மாசி மாதத்தில் வரும் மகவிழா புதுச்சேரியில் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும். வெளியூர்களில் இருந்து சுமார் நூறு சாமிகள் கடலில் மக முழுக்காடுவதற்குப் புதுவைக் கடற்கரைக்கு வரும்.